Wednesday 27 March 2013

உடன்பிறந்தோர் உறவு குருதியொடு கலந்த உறவு.

 மனதில் பட்டதை உன்னிடம் சொல்லி மகிழ்வதில் மன நிறைவு.

 அன்பு அண்ணனே  அருமையாக உன்னால் மட்டும் இப்படி எப்படி எழுத முடிகின்றது! காட்சியில் கண்டதையும் மனதில் நினைத்ததையும் அருவியாய் கொட்டி மற்றவரையும் மகிழச் செய்கின்றாயே! அந்த திறமையை  உனக்கு கொடுத்த  இறைவனை நினைத்து நன்றி சொல்லி நீ தொழுது வருவதனை  இறைவனும் அறிவான். இருப்பினும் ஒன்று என்னால் அறிய முடிகின்றது எச்சில் பால் குடித்த தம்பியானாலும் என்னால்  உன்னோடு இணையாக ஓடி வரமுடியாது, இறைவன் தான் விரும்பியவர்களுக்குதுத் தான் அதனை தந்தருள்வான்.அவன் கொடுப்பதும், எடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் நன்மையாகத்தான் இருக்க முடியும்.
 தொப்புள் கொடி பாசத்தினை நினைவினை நிறுத்தி கவிதை வடிக்கின்றாய். அதனை உன்னால் நீ நினைத்தாலும் நிறுத்த முடியாது. வந்து சேர்ந்தவள், ஒட்டிக் கொண்டவள் நமது உறவை அறுக்க நினைத்தாலும் முடியாது. காரணம் நம்முறவு குருதியொடு கலந்த கலவை. .குருதி ஓடும்வரை உறவும் ஒட்டிக் கொண்டே ஓடும். நீ ஓடிக்கொண்டே இரு அதனை கண்டு ஆசை அடங்காமல் உன்னைக் கண்டு மனம் மகிழ உன் பின்னே நானும் ஒடிவருவேன்.

No comments:

Post a Comment