Saturday 20 April 2013

எத்தனை முறை ஏமாற்றப்படுவாய்


எத்தனை முறை ஏமாற்றப்படுவாய்
அத்தனை அளவு நேசித்த மானிடரால்
நாட  வேண்டிய நாயகனை நாடவில்லை
நாடியவன் நேசிக்க நாயகன் ஏமாற்றுவதில்லை

அத்தனை முறை உன்மனதில் ஏற்றி வைத்தாள் தாய்
அத்தனையும் பாசத்தால் வந்த பரிந்துரைகள்
அம்மாதானே சொன்னாள் என்ற அலட்சியம்
அனுபவம் அம்மாவின் வாக்கை உயர்வாக்கிக் காட்டியது



மனதில் கவலை
நடையில் தளர்ச்சி
தனிமை நிலை
விழிகளில் நீர்

இதய துடிப்பின் வேகம்
இறை இல்லம் நாடி நடை
இறைவனை நினைத்து தொழுது
இறைவனிடம் அடைக்கலம்

மனதில் அமைதி
நடையில் வேகம்
தனிமை மறைந்தது
விழிகளில் வெளிச்சம்

No comments:

Post a Comment