Monday 8 April 2013

காதலித்துப் பார் கடமையில் மூழ்கிடுவாய்!

உனையறிந்தால் உன் கடமையை செய்வாய்
உன் கடமையச் செய்ய மார்க்கத்தை தேடுவாய்

சுவனத்தின் ஆரம்பம் ஆதம் அவ்வா நேசத்தில்
சுகம் தரும் நேசம் நாட நம் விழிகள் திறக்கும்
விழிகள் திறக்க நெஞ்சத்தில் ஈரம் சுரக்கும்
ஈர இதயம் மார்க்கத்தைத் தேடும்
மார்க்கம் மனதில் வந்தடைய மனித நேயம் பிறக்கும்
மனித நேயம் வாழ்வை சிறப்பாக்கிவிடும்
வாழ்வின் சிறப்பு மார்க்கத்தின் ஒளிவிளக்கு
மார்க்கம் இறைவனை தேடவைத்து மார்க்கத்தின் மகிமை அறிய வைக்கும்
மார்கத்தின் மகிமையால் இறையோனை இறைஞ்ச வைத்து உள்ளம் உயர்வடையும்

உப்பால் செய்த பாவை மழை வர கரையும்
கடின மனம் கொண்ட நெஞ்சம் வாழ்வை அழிக்கும்
நேசிக்கும் மனம் படைத்த நெஞ்சம் நீடித்த வாழ்வைத் தரும்
மார்க்கத்தால் இறைவனையறிந்து
செய்யாததனை செய்தேனென்று
செப்பித் திரிவதனை தவிர்ப்பாய்
நேசித்துப் பார் நேர்மையாய் வாழ்ந்துக் காட்டுவாய் 

Please click here நமை காப்பவன் யாரோ! இறைவன் அவன்!
Please click here பிறப்பதும் இறப்பதும் உன் செயலாலே.. 
Please click here யாஅல்லாஹ் ஈடில்லா ஏகாந்தன் நீயே...

No comments:

Post a Comment