Thursday 9 May 2013

பெயர் வைத்த காரணம்!


காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.



எங்கள் வீட்டு தெரு பெயர் ஜின்னாத் தெரு .அதில் முதல் வீடு எனது வீடு ,எனது வீட்டுக்கு நேர் எதிரில்

<பள்ளிவாசல் உண்டு .

 தெற்கு பார்த்த  வீடுகள் முதல் ஐந்தும் எனது உடன் பிறந்தோர் வீடுகள்



நன்றாக படித்துப் பாருங்கள் எனது தகப்பனார் அவர்கள் கைப்பட எழுதியது முஸ்லிம் லீக் மாநாடு பற்றியும் மற்றும் பல செய்திகள்


" பாத்திமா ஜின்னா பிறந்தது மதராஸ் முஸ்லிம் லீக் மகாநாடு நடந்த சமயம் "
1941ஆண்டு ஏப்ரல் 12 மதராசில் முஸ்லிம் லீக் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டிற்கு காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னா கலந்து கொண்டார்கள். எனது தகப்பனார் நீடுர் .ஹாஜி .சி .ஈ அப்துல் காதர் சாகிப் அவர்கள் மாயவரத்திலிருந்து மதராசுக்கு தனி ரயில் வண்டி ரிசர்வ் செய்து மாயவர சுற்று வட்டார இஸ்லாமிய மக்களை அழைத்துச் சென்றார்கள்.மதராஸ் முஸ்லிம் லீக் மாநாடு நடந்த அன்று எனது அன்புத் தங்கை பிறந்ததால் அந்தப் பெயர் எனது அன்புத் தந்தையால் பாத்திமா ஜின்னா எனப் பெயர் வைத்தார்கள்.காயிதே அக்லம் முகம்மது அலி ஜின்னாஅவர்களின் தந்கையின் பெயர் பாதிமாஜின்னா. அவர்களும் அந்த மாநாட்டில் கலந்துக் கொண்டார்கள்.

2 comments:

  1. மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. திண்டுக்கல் தனபாலன்அவர்களது கருத்துரைக்கு மிக்க நன்றி

    ReplyDelete