Thursday 13 June 2013

மரம்னா சாதாரணமா! மரம் ஒரு வரம்.


அப்பா
ஏன்டா மரம் மாதிரி நிக்கிறே! கேட்கிறதுக்கு பதில் சொல்லு.
மகன்
மரம்னா உங்ககளுக்கு சாதாரணமா போச்சா ! மரமிருந்தாதான் மழை பெய்யும்,நிழல் கொடுக்கும். மரம் நடச் சொல்லி எல்லோரும் சொல்றாங்க .
அப்பா .
தனி மரம் தோப்பாகாது. மக்களோடு பழகனும் ,ஒற்றுமையா இருக்கணும் .
மகன்
நான் தனி மரமா இருக்க விரும்பவில்லை.எனக்கு கல்யாணம் பண்ணி இன்னொரு மரத்தையும் சேர்த்துடுங்க .அப்புறம் பாருங்க அது நல்லா வேறுன்றி செழிப்பா வளர்ந்து கிளைகள் அதிகமாகி அதன் விதைகள் வழியே பல மரங்களை உருவாக்கி தோப்பாகும் .
 நீங்கள் சொன்ன இந்த தனி மரம் அடுத்த மரத்தோடு சேர்த்து வைத்த பின் பாருங்கள்   உங்கள் பரம்பரையை வளர்த்து நிற்கும்
அப்பா
நான் ஒரு மரம் உன்னிடம் சொன்னேனே!

-------------------
 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
    பெருந்தகை யான்கண் படின். - குறள் 217:

மு.வ உரை:
 ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடத்து செல்வம் சேர்ந்தால் அஃது எல்லா உறுப்புகளுக்கும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.

5 comments:

  1. குறளோடு சொன்ன விதம் அருமை... பாராட்டுக்கள்...

    நன்றி...

    ReplyDelete
  2. A tree is nature's gift to mankind.But then, in the name of development we don't foster them, but chop them off.

    ReplyDelete
  3. tree might have seemed simple to our forefathers, but to us it is very precious and to our children it would be something of a gods gift to save the world, maram maram thaan...

    Simpleindianmom

    ReplyDelete