Tuesday 18 June 2013
என் விழி இதழ்களை தொட்டால் !
என் விழி இதழ்களை தொட்டால் ரோஜாவின் இதழ்களைப்போல் மென்மையாக இருப்பதை உணர்கிறேன்
நீ சொல்கிறாய் 'என்னைத் தொட்டாலே ரோஜாவின் இதழ்களை விட மென்மையாக இருப்பதாய்' சொல்கிறாய்
நான் சொல்கிறேன் 'ரோஜா மலரை தொடும்போது ரோஜாச் செடியின் முள் உன்னை கீறிவிடும் அதுபோல் என்னைதொட முயன்றால் உன் உடலில் கீறல் வந்து விடும் என்பதை நினைவுக் கொள்' என்று.
நீ சொல்கிறாய் 'என் வாயின் இதழ்களின் வழியும் நீர் கீறலுக்கு மருந்தாகிவிடும் ஒரு முத்தம் தரும்போது' என்று
நான் சொல்கிறேன் 'நான் உன்னை முத்தம் கொடுத்தால் என் வாயில் உள்ள பற்கள் உன்னை கீறிவிடுமென்று' என்று
நீ சொல்கிறாய் 'நான் கொடுக்கும் முத்தத்தில் மயங்கி விடுவேன் அது கீறலினால் வந்த வலியை மறக்கச் செய்துவிடுமமென்று'
நான் சொல்கிறேன் 'நாம் பேசியே நேரத்தை கடத்தி விட்டோம் .நீ பேசுவதோடு சரி செயலற்றவன் வருகிறேனென்று '
ஒன்றுமே நடக்கவில்லை இந்த வார்த்தை உனக்கு மயக்கத்தை தந்துவிட்டதே! இப்பொழுது உன்னை யார் மருத்தவரிடம் அழைத்துச் செல்வது .நான் இங்கு நிற்பதே ஆபத்தை எனக்கு விளைவிக்கும் நான் வருகிறேன்.
முதலில் என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் .
இனியாவது வீண் கற்பனையில் மூழ்காமல் உன்னைப் பாதுகாத்துக் கொள் .
Subscribe to:
Post Comments (Atom)
முடிவில் இரு வரிகள் பிரமாதம்...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
பிரமாதமான வாழ்த்துரை .
ReplyDeleteநன்றி.திண்டுக்கல் தனபாலன்அவர்களுக்கு