Saturday 31 August 2013

மோடி மஸ்தான்




பாம்பினைக் கண்டு நடுங்கிய மோடி மஸ்தான்
பாம்பினை மயக்க மகுடியை ஊதி பாம்பினை மயக்கினான்

மகுடி ஊதுதல் மக்களை மயக்கவும் உதுவுமோ!
மகுடி ஓசை ஒவ்வாத ஓசையாக காத தூரம் ஓடுகின்றார் மக்கள்
மோடி மஸ்தான் அறிந்தானில்லை மக்கள் பாம்பின் இனமில்லை யென்பதை

பாம்பினைக் கண்டு பயந்து ஓடுபவன்
தடியெடுத்து பாம்பினை விரட்ட மாட்டான்

பாம்பு போகிற போக்கில் போக விட்டு விடு
பாம்பு உரையும் இடம் பொந்துக்குள் தான்
பாம்பு பொந்து கொல்லைக்குள் இருந்தால்
பாம்பு வீட்டிற்குள்ளும் புகுந்து விடும்
பாம்பின் பொந்து நம் எல்லைக்குள் இருக்க வழி வகுத்து விடாதே

No comments:

Post a Comment