Friday 27 September 2013

உயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது



உயிர் போகும் இடம் அறியேன்
உடல் போகும் இடம் அறியேன்
உயிர் போகும் என்பதை அறிவேன்

உயிரை கொடுத்ததும் உயிரை போக்குவதும் இறைவஉயிர்ன் தான்
உயிரை கொடுத்து உயிரை நிறுத்தி வைப்பதும் இறைவன் தான்

உயிர் இருக்க உயிரை உயர்வாக்க  இறைவனை தொழுகச் செய்கிறேன்
உயிர் இல்லாத  உடலை உணர்வற்று போகச் செய்தவனும் இறைவன்
உயிர் இல்லாத  ஓர் எழுத்து உயிர் பெற்றது ஒரு சொல்லால்
உயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது


"உடல்தான் உயிரென்றாச்சு,
அதற்கு உலக்கை என்பதே மூச்சு,
நல்ல நடப்பெனும் நெல்லைப் பாய்ச்சு,
தெய்வ நாட்டத்தையே உருவாக்கு

வாசிஹாஹா சரமாத்தி குத்தடி ஹூஹூ
திக்கிர் முழக்கிக் குத்தடி ஹீஹீ"

-ஞானக்கவி ஹக்கீம் அய்யூபு அவர்கள்
 பெரிய ஞானப்பாடல் இது,வாசி என்பது மூச்சுப் பயிற்சியின் சூத்திரம்.ஹாவென்று தூக்கி நீட்டு,அல்லாஹூ வென்று சரம் ஓட்டு என்று மூச்சுப்பயிற்சியின் மூலம் இறையண்மையைப் பெறுவதற்கான தவயோகமே இப்பயிற்சி-Nisha Mansur

ஸூரத்துல் இஃக்லாஸ்(ஏகத்துவம்)- குர்ஆன்
மக்கீ, வசனங்கள்: 4
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎


1 comment:

  1. மூச்சுப் பயிற்சியின் சூத்திரம் புதிதாக உள்ளது...

    ReplyDelete