Friday 13 September 2013

'ஓ' வென கதறி அழுதேன்

"And He gave you of all that you asked for, and if you count the blessings of Allah, never will you be able to count them…" Al Quran (14:34

இதயக் கோளாறு வந்தது
இதய அறுவை அவசியமென்றார் மருத்துவர்
இதய சிகிச்சை சிறப்பாக முடிவுற்றது
இதய அறுவையை முடித்து மருத்துவர் செலவுக்கான தொகையைச் சொன்னார்

இதயமே வெடித்துவிடும் போல் 'ஓ' வென கதறி அழுதேன்
இதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஆறுதல் சொல்லி சிகிச்சைதொகையை குறைக்கச் சொன்னார்

நான் மருத்துவரிடம் சொன்னேன் ' உங்கள் சேவைக்கு நன்றி தெரிவித்தேன் மற்றும் உங்கள் சிகிச்சைக்கு கொடுக்கும் தொகைக்கு நான் அழவில்லை . எழுபது ஆண்டு காலம் எனது இதயத்தை சீராக ஓட வைத்த எனை படைத்த இறைவனுக்கு இத்தனை ஆண்டுகளாக நன்றிக்காக அவனை தொழுது வராமல் இருந்தோமே! என நினைத்து என் மனம் குமுறுகிறது மனதை கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறேன்' என்றேன்

No comments:

Post a Comment