Thursday 10 October 2013

கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்!

இறை இல்லம் செல்ல ஆசை இறைவனைத் தொழ
இறைவனுக்காக முதன் முதலில் கட்டிய ஆலயம் கஃபா
இறை முதன் ஆலயம் கஃபாவை நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட
இறை முதன் ஆலயம் கஃபாவை நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட
இறை இல்லத்திற்கு கஃபா (முதல் இறையில்லம்) போவது முடிந்தோர் கடமை

உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டை உணர்த்துமிடம் கஃபா
உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடம் கஃபா
உலக மக்களின் உயர்வு தாழ்வுகளை நொறுக்குமிடம் கஃபா
உலக மக்களின் நிற வேற்றுமைகளை நசுக்குமிடம் கஃபா

நாவசையட்டும், ஈரம் மனதில் சுரக்கட்டும்
கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்
நினைத்ததை நினைவில் நிறுத்தி இறைவனை கேட்டு விடுவோம்
நெஞ்சுருகி அருளாளனும் அன்புடையோடும் கருணையுடையோனுமாகிய அல்ல்லாஹ்விடம் கேட்டு விடுவோம்

லைப்பைக் அல்லாஹும்ம லைப்பைக் லப்பைக்க லா ஷரீக்க லக்க லப்பைக் இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லா ஷரீக்க லக். ...
தல்பியா

வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்
உனக்கு இணை எவருமில்லை
வந்துவிட்டேன்
நிச்சயமாக அனைத்துக் புகழும்
அருட்கொடையும் உன்னுடையதே
உனக்கு இணை எவருமில்லை
யா அல்லாஹ்! நீயே சாந்தியானவன் உன் மூலமே சாந்தி ஏற்படுகிறது. எனவே எங்களைப் படைத்து பரிபாலிப்பவனே! எங்களை சாந்தியோடு வாழச் செய்வாயாக!

யாஅல்லாஹ்! புனிதமான இந்த உனது வீட்டிற்கு சிறப்பையும் மகத்துவத்தையும்; கண்ணியத்தையும் கம்பீரத்தையும் அதிகப் படுத்துவாயாக என் வாழ்க்கையில் கேட்கப்போகிற அனைத்து ஹலாலான, துஆக்களையும் ஏற்றுக் கொள்வாயாக (மற்றும் நாம் நினைக்கும் எல்லா துஆக்களையும் கேட்ட பிறகு) ஸலவாத் ஓத வோம்.

இறைவா! உன்னை விசுவாசம் கொண்டவனாக, உனது கட்டளையை நிறைவேற்றியவனாக, உனது திருநபியின் வழியைப் பின்பற்றியவனாக, மேலும் உனது திருநபியின் மீது ஆசியும், ஆசீர்வாதமும் கூறியவனாக, உன் திருநாமம் கொண்டு ஹஜ்ருல் அஸ்வத்தை முத்தமிடுகிறேன்.

“பயனுள்ள கல்வியையும், தாராள சம்பத்தையும், இரண பாக்கியத்தையும், எல்லா நோய்களுக்கும் அருமருந்தாகவும் ஆக்கி வைக்க யா அல்லாஹ்! உன்னிடம் வேண்டுகிறேன்.
{ஜம்ஜம் நீர் பருகியதும் கஅபாவின் வாசல் முல்தஜிமைப் பிடித்து ஓதவேண்டியதுஆ)

“பழமையான புனிதமான இவ்வீட்டிற் குறித்தான யா! அல்லாஹ்! நரகிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக! ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாயாக! இன்னும் நீ எங்களுக்கு அளித்தவற்றில் அபிவிருத்தி (பரக்கத்) செய்வாயாக! உனது சிறந்த கூட்டத்தாரிகளில் எங்களை சேர்ப்பாயாக! நீ எங்கள் மீது புரிந்த அருளுக்காக, உனக்கே எல்லாப் புகழும். அனைத்து நபிமார்கள் தூதர்கள், நேசர்களின் தலைவரான எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், இன்னும் அவர்களின் தோழர்கள், நேசர்கள், குடும்பத்தினர் மீதும், உனது அருள் உண்டாகட்டுமாக!”
-----------------------------------------------------------------------------------------------
                                              புனித மக்கா நேரலை

No comments:

Post a Comment