Sunday 13 October 2013

இந்த கொள்கை உயர்வைத் தரும் _ எது உண்மை ?


இந்த உலகம் நமக்கு
நிலையானதல்ல தற்காலிகமானதே 

இந்த செயல் நமக்கு
நன்மையும்  தீமையும் சேர்ந்த கலவை

இந்த உள்ளம்  நம்மை
நன்மையை நோக்கி உயர்த்துவது  உயர்வு

இந்த  நமக்கு
நன்மையை நாடி உந்துதல் சிறப்பு

இந்த வாழ்க்கை நமக்கு
உயர்வைத் தந்து  தாழ்வை தகர்க்க் வேண்டும்

இந்த காதல் நமக்கு
அனுமதிக்கப் பட்டதாய் மகிழ்வை தர வேண்டும்

இந்த ருசி நமக்கு
மனிதருக்கு மனிதர் மாற்பட்டது 

இந்த கலவி வரும் வழி
கற்றதனால் வரும் அனுபவத்தால் சிறப்படையும்

இந்த பெற்ற செல்வம்
சேர்த்த முறையும் செலவிடும் முறையும் நற்செயலாய் அமைதல் வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
எது உண்மை ?

 இந்த உலகம்
 நமக்கு
 நிலையானதா தற்காலிகமானதா

 இந்த செயல்
 நமக்கு
 நன்மையா தீமையா

 இந்த உள்ளம்
 நம்மை
 உயர்த்துமா தாழ்த்துமா


இந்த பார்வை
 நமக்கு
 பலமா  பலவீனமா

இந்த வாழ்க்கை
நமக்கு
உயர்வா தாழ்வா

இந்த காதல்
நமக்கு
கூடுமா கூடாதா

இந்த ருசி
நமக்கு
நல்லதா கெட்டதா

2 comments:

  1. அனைத்தும் நம் மனதைப் பொறுத்து...

    சிந்திக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. ( இந்த கலவி வரும் வழி ---> இந்தக் கல்வி வரும் வழி )

    ReplyDelete