Monday 21 October 2013

நீ என்னோடு நான் உன்னோடு

நீ என்னோடு இருப்பதாக உணர்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் உன் மனம் அறிந்திருக்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் உன் மணம் உணர்கின்றேன்
நீ என்னோடு இருப்பதால் நான் உன்னை காதலிக்கிறேன்

நீ என்னோடு இல்லையென்றாலும்
நான் உன் மணம் உணர்கின்றேன்
நான் உன் மனம் அறிகின்றேன்
நான் உன்னை காதலிப்பதால்

வீசும் தென்றல் உன்னைத்  தழுவி கடந்து வருகின்றது
வீசும் தென்றல் என் நெஞ்சை தழுவுகின்றது
வீசும் தென்றல் உன் மணம் தந்து மகிழ்விக்கின்றது
வீசும் தென்றலையும் நான் காதலிக்கிறேன் உன் மணம் வீசுவதால்

1 comment:

  1. ரசிக்க வைக்கும் கவிதை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete