Monday 14 October 2013

கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்


அலைபாயும் கண்கள் ஆண்கள் கண்கள்
கலையாகும் கண்கள் பெண்கள் கண்கள்

ஆண்களை அறிய அவர்கள் செயலைப் பார்
பெண்களை அறிய அவர்கள் கண்களைப் பார்

பெண்களின் இதயம் ஓர் ஆழ் கடல்
ஆழ் கடலில் மூழ்கி முத்தைப் பெறு

பெண்களின் உள்ளம் அறிய கண்களை உற்று கவணி
பெண்களின் உள்ளம் கண்களில் ஒளிந்து உள்ளது

ஆண்களின் கோபம் இடியோடு வரும் மழை
பெண்களின் கோபம் இடியற்று கொட்டும் அருவி

ஆண்களின் நட்பு காரியம் நாடி நிற்கும்
பெண்களின் நட்பு மனதை நாடி நிற்கும்

ஆண் சேர்த்து மனைவியிடம் கொடுப்பான்
பெண் சேர்த்து தாயிடம் கொடுப்பாள்


1 comment: