Wednesday 30 October 2013

தன்னை உயர்த்திக் காட்டி நிற்பதல்ல சேவை

மல்லிகை மணம் வீசும்
மல்லிகையை முடியில் வைக்க மணம் பரப்பும்

மணம் கொடுக்க மனம் மகிழும்
மனம் மகிழ்வில்லை மல்லிகை சூடி மணம் மகிழ்விக்க
மனம் வாட மற்றவர் மனம் மகிழ மல்லிகை ஏன்

உன் மனதின் வேதனை உனை விட்டு நீங்கும்
மற்றவருக்கு நீ கொடுக்கும் மகிழ்வினால்

நாம் மகிழ மற்றவரை மகிழ்வித்தல் உயர்வு
நாம் மற்றவரை மகிழ்விக்க நம் வேதனை நம்மை விட்டு அகலும்

நம் வேதனை நமக்குள் தேங்கி நிற்க
நம் வாழ்வே வேதனைதான்

இருக்கும் வேதனை சேவையால் விலகும்
செய்யும் சேவை மகிழ்வை பரப்பும்

சேவை இருண்ட இடத்தில இருப்பதல்ல
சேவை மக்களோடு சேர்ந்திருப்பது

தன்னை உயர்த்திக் காட்டி நிற்பது பனைமரம்
தன்னை பரப்பிக் காட்டி நிழல் தருவது ஆலமரம்

தனி மரம் தோப்பாகாது
தனிமை மகிழ்வை தராது

1 comment:

  1. // தன்னை பரப்பிக் காட்டி நிழல் தருவது ஆலமரம் //

    சரியாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete