Saturday 19 October 2013

எங்கிருந்தோ வந்தாய் !

எங்கிருந்தோ வந்தாய்
என்னுள் புகுந்து விட்டாய்
என்னை அடக்கவும் செய்தாய்
என்னை ஆளவும் செய்தாய்

எனக்கென்று ஒரு கொள்கை
எனக்கென்று ஒரு ஆசை
எனக்கென்று இருந்ததை இழந்து
எனக்கென்று இருந்தது உன் பிடியில்

உண்மை உறைக்க பொய் என்கிறாய்
பொய் உறைக்க உண்மை என நம்புகிறாய்
மை போட்டு என்னை மயக்கினாயோ!
உண்மை உன்னில் அடக்கமோ

உன் கண் அசைப்பில் அடங்கிய என்னை
உன் கண்காணிப்பில் இருக்கச் செய்கிறாய்
உன் போக்கில் நான் இருக்கச் செய்ய
என் போக்கு என்னை விட்டு அகன்றது

எத்தனை காலம் இந்த நிலை!
எத்தனை காலம் ஆனாலும் இன்னிலை தொடருமோ
எத்தனை காலம் ஆனாலும் என்னிலை உன்னிலையோடு
வந்த நிலை வரும் நிலையோடு மாறும் நிலை வந்தே தீரும்

ஒரு மனதின் நிலை அன்பின் நிலையை காயப்படுத்துமோ !

No comments:

Post a Comment