Wednesday 9 October 2013

மன உளைச்சல் மறையும்

என் குற்றங்களை குறைக்க எனக்கு ஆடை
எனக்கு குற்றங்கள் வராமல் தடுக்க் எனக்கு ஆடை
எனது ஆடைகள் பல நூல் இழைகளால் மூட்டப்பட்டிருக்கும்
எனது இதயத்தில் பாவ இழைகள் வராமல் தடுக்க இறை பக்தி

என்னை அறியாமல் பாவச் சுமைகள் வந்தால் இறையிடம் மன்னிப்பு வேண்டுதல்
என்னை அறியாமல் மற்றவர்களை பாதிக்க நேரிட்டால் பாதிக்கப் பட்டவரிடம் மன்னிப்பு கேட்டல்
என் இறைவன் கருணையாளன் யன் மன்னிப்பை ஏற்றுக் கொள்வான்
என் தவறை அறிந்தோர் பாசத்துடன் என் தவறை மன்னித்து மறப்பர்

என் பாவங்களை அசிங்கமாக உள்ளன வென்றாலும் ,
என் பாவங்களை மன்னிப்பது உயர்வாக உள்ளது
என் பாவச் செயல்களால் கூனிக் குறுகி நிற்பதை நான் அறிவேன்
என் நோதலைக் கண்டு கனிவோடு ஆறுதல் கூறும் மக்களின் மாண்பு

என் மன உளைச்சலில் என் இறைவன் பதிலளிப்பான் !
என் மன உளைச்சல் என்னிடமிருந்து மறையும்
என்னுடைய குற்றம் மறைய உங்கள் அன்பு, பெருந்தன்மை மற்றும் கருணை
என்னுடைய நம்பிக்கை ஏமாற்றமாகி விட யாரும் விரும்ப மாட்டார்
என்னுடைய நம்பிக்கை இறைவனின் அருளோடு இயைந்து இருக்கும்

யாண்டும் திருப்புமுனையை நான் என்னை உள்ளாகி உருவாக்கி சீர் செய்ய !
யாரை நான் அடைக்கலம் பெற வேண்டும்?
யாண்டும் இறைவனை நாடித்தான் நான் தொழுது நிற்க வேண்டும்
யாவற்றையும் படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனைத்தான்.

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
- குர்ஆன்: 7:26.

"வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல"

No comments:

Post a Comment