Wednesday 18 December 2013

நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

விடியல் வருமுன்னே விழிகளில் நீர் பாய்ச்சி
வைகறையில் நீல வானத்தை நோக்கி
விழிகள் நட்சத்திரங்கள் போல் இமைக்க
வழியைப் பார்த்து புத்துணர்ச்சி பெற்று நடை போட
அவனை நேசித்து அவனுக்காக அவனில்லத்தில் தொழுதேன்.

இல்லம் வந்து இனிய தேநீர் அருந்தி
மகிழ்வு தரும் குழ்ந்தைகளுடன் கொஞ்சி விளையாடி
நண்பர்களுக்கு முகநூல் வழி மின்னஞ்சல் செய்து
முகநூலில் அறிந்ததை எழுதி மகிழ்ந்து
சூடான சுவையான சிற்றுண்டி உண்டு
பழ சாறுகள் மற்றும் பானங்கள் அருந்தி
சூட்டோடு செய்து வர வேலைகள் முடிக்க புறப்பட்டேன்


நேற்றைய வேலைகள் இன்று நெடு நேரம் உறங்க வைக்க
விடியல் வரு முன்பே இறைவனைத் தொழுதல் கடமையாய் இருக்க
இறைவனைத் தொழுதலை தாமதிக்கச் செய்ய
இன்றைய விடியலின் அழகையும்
இயல்பான இனிய மகிழ்வையும் இழக்க நேரிட்டது

குழந்தைகள் ஓடி வந்து கொஞ்சும் பரவசத்தையும் பறக்க விட்டேன்
கூட இருந்து குடும்பம் நடத்துபவளின் ஆசை முகத்தையும்
அனுபவிக்கத் தெரியாமல் திகைத்து நின்றேன்

இறைவா! எனது கண்களைப் பார்க்காதே
இறைவா! எனது இதயத்தைப் பார்
இறைவா! என் குறை நிறை நீ அறிவாய்
இறைவா! அறியாக் குறையை நீக்கி
இறைவா! நிறைவாய் உன் அருளைத் தந்தருள்வாய்

No comments:

Post a Comment