Tuesday 23 December 2014

இருக்கும் நாளையே உய்ர்வாக்கிக் கொள்வோம்

ஒவ்வொரு நாளும் உயர்வு
ஒவ்வொரு மாதமும் உயர்வு

நாளை நடக்கப் போவதை நாம் அறியோம்
நாம் இருக்கும் நாளையே உய்ர்வாக்கிக் கொள்வோம்

இருக்கும் நாளெல்லாம் உயர்வு
இருக்கும் காலங்கள் முழுமை பெற சேவை தேவை
கிடைக்கும் நாளையெல்லாம் சிந்தித்து செயல்படுத்த வேண்டும்

அனைத்தும் இருந்தும் ஒன்றும் இல்லாத நிலை !


வசதிகள் இல்லை
குறைவுகள் இல்லை

வசதியானவர்களைப் பார்த்து
வசதிகள் வேண்டுமென்று வாடினேன்

வசதிகள் கிடைக்க
வேண்டியதை செய்தேன்

வசதிகள் கிடைத்தது
வேண்டியவைகள் கிடைத்தன

வேண்டியவைகள் கிடைத்தது
வேண்டியது கிடைத்தும் மன நிறைவு இல்லை

நிறைவோடு கிடைக்கும் வாழ்வே
நிம்மதியான (பரக்கத்தை-அருள் வளம்) வாழ்வைத் தரும்

Tuesday 16 December 2014

பழமையை பாதுகாத்து புதுமையை நாடுவது உயர்வு !

உங்களால் அழகிய அரண்மனையை கட்ட முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தர முடியும்
உங்களால் அழகிய அரண்மனையை இடித்துத் தள்ளவும் முடியும்
உங்களால் சிறப்பான ஆட்சியையும் தகர்த்துத் தள்ளவும் முடியும்

உங்களால் இங்கும் அங்கும் கட்டடங்கள் கட்ட முடிந்தாலும்
உங்களால் இங்கும் அங்கும் ஆட்சியை அமைக்க முடிந்தாலும்

உங்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும்
உங்களால் உருவாக்கப் பட்ட ஆட்சிகளிலும்
உங்களால் பழமையின் தனித்தன்மையை
உங்களால் ஒருபோதும் கொண்டு வர முடியாது

உங்களால் கட்டவும், இடிக்கவும் முடியும்!
உங்களால் சிதைக்க நினைக்கும்
உங்களால் சரித்திர புகழ்பெற்ற சிறப்பான கட்டிடங்களை
உங்களால் பழைமையின் தனித்தன்மையை கொண்டு வர முடியாது.

Monday 15 December 2014

வெட்கம் வருவது உடற்கூறு மற்றும் குணத்தைப் பொறுத்தது

சேர்ந்து வா தயக்கம் காட்டாதே
சேர்ந்து வர வெட்கமாக இருக்கிறது
சேர்ந்து வாழ விருப்பம்
சேர்ந்து வர ஏன தயக்கம்
சேர்ந்து போக பார்ப்பவர்கள் பரிகாசம் செய்வார்கள் என பயமாக உள்ளது

இந்த காலத்திலும் இப்படியா இருப்பது
இந்த காலத்திதான் இப்படி இருக்க வேண்டுமாம்
எந்த காலத்தில்தான் சேர்ந்து வருவாய்
புனித பயணம் ஹஜ் செய்யும்போது சேர்ந்து போவோம்
புனித பயணம் ஹஜ் செய்ய காலம் கடத்த விரும்புகின்றாயா
புனித பயணத்தை இப்பொழுதே செய்து விடவேண்டுமென்று விரும்புகின்றேன்

Saturday 13 December 2014

வேண்டியதை வேண்டிக்கொள் முடிவு செய்பவன் முற்றும் அறிந்தவன்!

 மழை
பெய் யென்றாலும் பெய்யாது
நில் யென்றாலும் நிற்காது

அப்பக்கம் பெய்யும்
இப்பக்கம் பெய்யாது

வேண்டியவர் வேண்டியும் பெய்யாது
வேண்டாதவர் வேண்டாமலும் பெய்யும்

பெய்வதற்கு காலமும் உண்டு
பெய்யாததற்கு காரணமும் உண்டு

ஒருவருக்கு வேண்டியது
மற்றொருவருக்கு வேண்டாததானது

பெற்ற மகள் இருவேரிடத்தில் வசிக்க
ஒரு மகள் தந்தையை வேண்டினாள்
பெய்யாமல் இருக்க இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்தால் அறுவடை விரயமாகுமென்றாள்

மற்றாரு மகள் வேறிடத்தில் இருந்து தந்தையை வேண்டினாள்
பெய்ய இறைவனை வேண்டச் சொன்னாள்
பெய்யாமல் போனால் செடிகள் வளர்ச்சியற்று வாடிப் போகுமென்றாள்

தந்தை இருவருக்கும் மனமிரங்கி ஒப்புதல் தந்தார்
தந்தை இறைவனிடம் வேண்டினார்
இறைவா !
நீ முற்றும் அறிந்தவன்
நீ கருணையாளன்
நீயே பாதுகாவலன்
இறைவா !
எது நல்லதோ அதைச் செய் என்று இறைவனை வேண்டினார்

பிரபஞ்சங்கள் அருமை அறிய வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் .


பல்லாண்டுகளின் முயற்சியின் தொடர் ஆய்வினால் பிரபஞ்சத்தின் அளவினை அறிந்து கொள்ள முடிந்தது

நூற்றாண்டுகளுக்கு மேல் முயற்சி செய்து உடல்களின் அமைப்பையும் அதன் அடிப்படையான வேலைகள் கண்டறிய முடிந்தன

அந்த உடல்களின் அங்கங்களை துல்லியமான வகையில் அவற்றை ஒன்றாக சேர்த்தது மற்றும் பிரபஞ்சங்கள் தனது வட்டத்தில் முறையாக தன் பாதையில் நகருவதை ஆக்குவித்தவன் இறைவனாகின்றான்

இந்த பிரபஞ்சத்தை தவிர்த்து இன்னொன்றும் நமக்காக உள்ளது அதனை நாம் இறந்த பின்னே அறிய முடியும் .அது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கும் .

இதன் அருமையை அறிய உயர்வான வாழ்வை இறைவன் அருள்மறையில் காட்டிய வழியில் இவ்வுலகில் வாழ்ந்தாக வேண்டும்

Tuesday 9 December 2014

நோயும் மனதிற்கு ஓர் நல்மருந்துதான்


உன்னை நீ அறிந்தால் உயர்வடையலாம்
நோயும் மனதிற்கு ஓர் நல்மருந்துதான்

தான் என்னும் அகம்பாவம்
தன்னால்தான் என்னும் தற்பெருமை
தன்னால்தான் எதுவும் முடியும் என்னும் செயல்பாடு
தன்னோடு பாவமான செயல்களையும் சேர்த்துக் கொள்கின்றன

தனக்கு நோய் வர தான் என்ற அகந்தை அகல்கின்றது
தான் செய்த செயல்களின் வெளிப்பாடு
தன்னை உணர வைக்க உதவுகின்ற காரணிக்ளாய் வருபவைகள்
பணிவு ,கண்ணீர் மற்றும் நோய்

திமிர் கொண்ட மனமுடையோர்க்கு
நோய் வருவதும் நன்மையாகவும் அமைகின்றது

அன்றாடம் பாவங்களைச் செய்பவன் பாவங்களை அறியான்
அனறாடம் பாவமன்னிப்பு நாடாதவன்
பட்டன போக பாவமன்னிப்பை பெறாமல்
பாவங்களை சுமந்துச் செல்கின்றான்

நோய் வந்ததால் பணிவும் வந்தடைகின்றது
பணிவு வந்ததால் பாவமன்னிப்பு நாடி கண்ணீர் சிந்துகின்றான்
சிந்திய கண்ணீர் அவனது பாவங்களைக் கரையச் செய்கின்றன
அமைதி மனதில் வந்தடைய நற்செயல்களை நாடுகின்றான்
நற்செயல்களை செய்தமையால் நிம்மதியாக இறக்கின்றான்

"அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 5678

Sunday 7 December 2014

எதிர்பாராத நேரத்தில் சில சம்பவங்கள்

நான் லயோலா கல்லூரியில் படிக்கும்போது தினம் நாங்கள் மூன்று பேர்கள் மாலை நேரத்தில் நடந்தே பாண்டி பஜாருக்குச் சென்று காப்பி குடித்து விட்டு மயிலாப்பூரில் நடை போடுவோம்.எங்களைப் பார்த்து எந்த பெண்ணும் பார்ப்பதில்லை
ஒரு நாள் ஒரு வீட்டில் ஜன்னல் வழியாக எங்களைப் பார்த்து ஒரு பெண் சிரித்தாள்
நாங்கள் அதிசயித்து அந்த இடத்தில மற்றவர்கள் கவணிக்காதபடி நின்று பார்த்தோம் .ஒருவர் அவ்வழியே வந்தவர் எங்களைப் பார்த்து 'தம்பிகளா அந்த பெண் சிரிப்பதைப் பார்த்துத் தானே நிற்கிறீர்கள் என்றார்
'இல்லை' என்றோம்
'தம்பி அந்த பெண்ணுக்கு சிறிது மூளை (பைத்தியம்) கெட்டு விட்டதால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வெளியில் போக விடாமல் அந்த அறையில் பூட்டி வைத்துள்ளார்கள் .நீங்கள் இரண்டு நாட்கள் இப்பக்கம் வருவதனைப் பார்த்து உங்களிடம் சொன்னேன் நீங்கள் தவறாக நினைக்காதீர்கள்' என்றார்
தவறு செய்யாத எங்கள் மனம் கூனிக் குறுகிப் போயிற்று .அந்த பெண்ணுக்காகக மனம் கசிந்தது
நாங்கள் ஏன் இனி அப்பக்கம் போவோம்! நாங்கள் ஏன் இனி பெண்களை ஏறெடுத்துப் பார்ப்போம்!

'வட்டிக்கு கடன் வாங்கி சடலத்தை எரிக்கக்கூடாது'.

மறக்க முடியாத உயர்ந்த கொள்கையோடு சேவை செய்து நேர்மையாக வாழ்ந்தவர்

மயிலாடுதுறையில் உள்ள எங்கள் கடையில் வைத்தியநாதன் நம்பிக்கையான ஒரு கணக்காளர்.
தனது வாழ்நாள் முழுதும் சேவை செய்தார்.
தனது பிள்ளைகள் சம்பாரிக்க ஆரம்பித்தும் தனது குடும்பத்தார் தடுத்தும் வாழ்நாள் இறுதி வரை கடைக்கு வந்து பணிகளை செய்வதில் பிடிவாதமாக இருந்தார் .
அவருக்கு ஆறு பெண்கள் ஒரு பையன் .அனைவரையும் சிறப்பாக மேற்படிப்பு வரை படிக்க வைத்து அவர்கள் வேலை செய்து ஈட்டிய பணத்தின் சேமிப்பைக் கொண்டு அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்.
ஒரே பையனை ஒரு விஞ்ஞானியாக்கினார்.
அவர் கலாம் பணியில் இருக்கும்போது தானும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஹரிஹோட்டாவில் மற்றும் திருவனந்தபுரத்திலும் வேலை.இப்பொழுதும் அங்கேயே விஞ்ஞானியாக இருக்கிறார்.

தனது மகனுக்கு  மட்டும் திருமணம் நடக்கு முன் அதிகாலை நேரத்தில் கணக்காளர் வைத்தியநாதன் எங்கள் கடை சம்பந்தமாக ஓர் இடத்திற்கு புறப்படுமுன் அவரது வீட்டில் இதய அடைப்பு வந்ததால் இறந்தார் .

அவர் ஒரு சிறந்த பண்பாளர் தி.க .கொள்கை கொண்டவர்.

அவர் இறப்புக்கு அவர் வீட்டுக்கு நான் சென்றபோது வாசலில் மாட்டப் பட்டிருந்த பலகையில் எழுதப் பட்டிருந்த நான் கண்ட வரிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது

"நான் இறந்து விட்டால் வட்டிக்கு கடன் வாங்கி எனது சடலத்தை எரிக்கக்கூடாது.அதைவிட எனது சடலத்தை நகராட்சியில் ஒப்படைத்து விடுங்கள்" என்பதாகும்.
Mohamed Ali

Thursday 4 December 2014

'அருமை நிச்சயமாக படிக்கிறேன் என்றார்'

இரவு கணினியில் அசைபோட்டு விட்டு
இனிய மென்மையான இசையை கேட்டுக் கொண்டே
இருக்கும்போது என்னை அறியாமல் உறங்கிவிட்டேன்
இரவு ஒரு மணிக்கு உறக்கம் கலைந்தது
ஊரெல்லாம் ஒரே அமைதி
லேசான மழைத் தூரல்
தூக்கம் கலைந்தது
அங்கும் இங்கும் அசைந்து படுத்தாலும்
அயரத் தூங்க முடியவில்லை

திரும்பவும் கணினி திறப்பு
கணினியில் என்னைபோல்
நெருங்கிய நண்பர் உலாவிக் கொண்டிருந்தார்

'இன்னும் தூங்கவில்லையா!' என்றேன்

'ஏனோ தெரியவில்லை இன்னும் தூக்கம் வரவில்லை' என்றார்.

'முத்தம் என்றொரு கட்டுரை எழுதியிருந்தேனே...' பார்த்தீர்களா என்றார்
நான் மட்டும் விடுவேனா !
'கடல் அலை வீசியதோ' என்று நான்  எழுதியதைப் பார்த்தீர்களா என்றேன்
(எனது முகநூல் ஸ்டேடஸ்)
-கடல் அலை வீசியதோ
காதல் வலை வீசியதோ

நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!

Wednesday 3 December 2014

அவர்கள் செய்த தவறை அவர்கள் அறியவில்லை

 
பாட்டு பாடு நண்பனே!
பாடுவது நல்ல பாட்டாய் பாடு
பாடுவது என்னைப் பற்றி பாடு
பாடுவதை என்னைப் புகழ்ந்து பாடு
பாடுவது புகழ்ச்சியாய் இருக்க
பாட்டினால் மாற்றம் பெற்று உயர்வடைய பாடு
பாடுவதை ஒரு பாடாக நினைத்து பாடாதே
பாடியவர்கள எல்லாம் என்னை ஏசியே பாடிச் சென்றனர்

வாழ்வெல்லாம் வசை மொழிகள்
நல்லவனாக்க நல்ல வார்த்தைகள் சொல்லவில்லை
வசைமொழிகள் மனதை தைத்தது
வசைமொழிகள் நல்லதை நாடவில்லை
வசைமொழிகள் வீம்பாக செயலை நாடியது

குடும்பத்தில் உள்ளவரே குறை கூறி ஊரெல்லாம் பரப்பினர்
தன் மகனே ஆனாலும் தனியே அறிவுரை தரவேண்டுமென்ற
உயர் நோக்கு அறியாமல் போயினர்
அன்பு இருக்குமிடத்தில் அறிவு மங்கிப் போனது

நொந்து போய் நலிவுற்றவனாய் நடுத்தெருவில் நிற்கிறேன்
நண்பனாய் மனதைத் தடவி அமைதியடைய நாலு வார்த்தைப் பாடு
நல்லது கெட்டது அறிய வைத்து அன்பால் மனதை வருடிப் பாடு
உன் பாட்டு கேட்க உயர்ந்து வர ஊரெல்லாம் புகழச் செய்வர்
குடும்பத்தார் கூடி நின்று கும்மி அடித்து மகிந்து வீட்டிற்கு அழைப்பர்

நான் செய்த தவறை நான் அறிந்தேன்
அவர்கள் செய்த தவறை அவர்கள் அறியவில்லை

பிரித்தவன் பிரிக்க முற்படுகின்றான் இடைவெளி வீட்டு

 
வெளிநாட்டில் போய் பிழைப்பை தேடலாம்
வெளிநாட்டிலிருந்து பணம் வரலாம்
வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வரலாம்

இந்நாட்டு மூத்த குடி வெளிநாட்டோடு போய்விட வேண்டுமாம்
ஓரினம் ஓர் மக்கள் இதுவே சங்க கால மக்கள் குணம்
பிரித்தவன் பிரிக்க முற்படுகின்றான் இடைவெளி வீட்டு

இரண்டு விழுக்காடு உள்ளவர்கள்
உரிமை கொண்டாடி மற்றவர்களை வெளியேற்றும் முயற்சி

ஐரோப்பா கண்டத்திலிருந்து வந்ததால்
போங்கப்பா மற்ற கண்டத்திற்கு என்று பேசும் மனப்பான்மை

ஓலை போட்டு மூலைப் பக்கம் கடை போட்டவன்
மூலைப் பக்கம் இடம் கொடுத்தவனை மூலைப் பக்கம் அனுப்ப முயற்சி

சமூக வலைதளங்களில் வளம் வருவது !

 
 
இருக்கும் அறிவு போகாமல் இருக்கிறது
இருக்கும் அறிவை வளர்த்து வைக்கிறது

வேண்டியது கிடைக்கிறது
வேண்டாததும் தோன்றுகின்றது

நேசம் வளர்கிறது
பாசமாகி தொடர்கிறது

பிடிப்பை தருகிறது
பிடித்த பிடி வலுவாகிறது

காதல் பிறக்கிறது
காதலில் மாற்றம் வருகிறது

புதியவை வருகிறது
பழையவையும் தொடர்கிறது

விளம்பரம் வருகிறது
விமர்சனம் தொடர்கிறது

வயது வித்தியாசமில்லை
தருவதில் வித்தியாசமுண்டு

ஏச ஓர் இடமாக இருக்கிறது
ஏசுவதற்கும் செலவில்லாமல் இருக்கிறது

ஆட்சியாளரும் பார்க்கின்றனர்
ஆட்சியாளருக்கும் மன தைரியத்துடன் எச்சரிக்கை கொடுக்க முடிகின்றது

கவிதையாகவும்
கதையாகவும்
கட்டுரையாகவும்
நிகழ்வாகவும்
மனதின் ஓட்டங்கள் நிறைவைத் தருகின்றது

குறையென்ன மனமே
மனதில் தோன்றியதை பகிர்ந்து
மனதின் பாரத்தை இறக்கி விடு

வார்த்தைகள் விளையாடட்டும்
வாழ்வு பெருகட்டும்
வாழ்த்துகள்

Saturday 29 November 2014

ஒவ்வொரு வினைக்கும் ஒவ்வொரு எதிர் வினை உண்டு

ஒவ்வொரு வினைக்கும்
ஒவ்வொரு எதிர் வினை உண்டு
For every action there is an equal and opposite re-action.
நட்பு நாடுகிறோம்
நட்பில் எல்லை இல்லை
கருத்தில் மாற்றம் இருக்கும்
ஆத்தீகமும் நாத்தீகமும் கொள்கையில் மாறுபடும்
மாறுபடுவது தனிப்பட்ட கொள்கை
நட்பு அன்பால் வருவது
நாம் நம் கருத்தை சொல்ல அவர் மாற்றுக் கருத்தை முறையாக சொல்ல முற்படும்போது அதனை கேட்டு நம் கருத்தையும் சொல்லி விளங்க வைக்க முயல்வதே கருத்துகளின் உண்மையான சிறந்த தகவல் பரிமாற்றங்கள்.அதனால் விரோதங்கள் வரக் கூடாது
அவரவரது மார்க்கம் மற்றும் கொள்கைகள் அவரவருக்கு உயர்வுதான்
ஒரே மரத்தில் காய்த்த பழங்களும் ,காய்களும் மாறுபட்டிருப்பது இயல்பு .மாறுபட்டதை காரணம் காட்டி மரத்தையே நாம் வெட்டி சாய்ப்பதில்லை . இது கல்ப்படமல்ல காய்த்தது .

'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.'

கவலை வர மறையின் அத்தியாய ஆறுதல் சொற்கள் ஒத
மனம் அமைதி பெற நிம்மதி நிறையும்

இறைவா !
என்னுள்ளும் நிறைந்திருகின்றாய்
எல்லாவற்றிலும் நிறைந்திருக்கின்றாய்
எல்லாவற்றையும் அறிய குர்ஆன் யெனும் மறை தந்தாய்

மதியைத் தந்து உம்மறையை அறிய ஆர்வம் தந்தாய்
மதி தந்தும் உம்மறையை ஓதியும்
உம சிறப்பை அறிந்திருந்தும்
கவலை வந்த போது கலங்கி நிற்கின்றேன்
கவலையை நாயகம் அடைந்த போது
“நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது” யென்ற
உமது ஆறுதல் சொற் தொடர்கள் நினைவுக்கு வந்தது
உமது உயர் மொழிகள் மனதை வருடியது
திரும்பத் திரும்ப என் நாவு சொல்ல
மனதில் அமைதிவந்தது

Monday 24 November 2014

நேரமிருக்கு


நேரமிருக்கு
சக்தியிருக்கு
பணமில்லை '-வாலிபன்

பணமிருக்கு
சக்தியிருக்கு
நேரமில்லை - தொழிலாளி

நேரமிருக்கு
பணமிருக்கு
சக்தியில்லை - முதுமையானவன்

கிடைத்ததை பயன்படுத்திக் கொள்
அனைத்தும் அனைத்து காலங்களிலும் கிடைக்காது
- தத்துவம் பேசுபவன்
முகம்மதது அலி
Mohamed Ali

செழுமையான பூங்காவாகி நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்


என் தாயை வாங்கி வளர்த்தார் உன் தாய்
என் தாய் உன் வீட்டில் என்னைப் பெற்றாள்
என் தாய் என்னை பாலூட்டி வளர்த்தது போல்
உன் தாய் உன்னை பாசமாய் வளர்க்கின்றாள்
உனக்கென்ன வருத்தம்

ஏன் உன் தலையை தரையில் தாழ்தினாய்
என் தாய் என்னை உதைத்தாலும்
என் தாயின் உதை எனக்கு உறுத்தாது
என் தாயினிடமே திரும்ப ஓடி நிற்ப்பேன்
என்னை பாசமாய் வளர்க்கும் உனக்கும்
என் குணம்தானே வரவேண்டும்

எழுந்திரு
எனக்காக எழுந்திரு
என்னோடு விளையாட
உன்னை விட்டால்
எனக்கு யார் உள்ளார்
நிமிர்ந்தெழு
உன்னை அறிந்த நெஞ்சே
உன்னை நிமிர்த்தி வைக்கும்

நாம்
மரங்கள் போல் வளர்ந்து
செழித்த கிளைகளை விளரவிட்டு
விதைகளை விழச் செய்து
செழுமையான பூங்காவாகி
நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்
முகம்மதது அலி
Mohamed Ali

Thursday 20 November 2014

நல்லதை நாடு

தினமும்
கவனித்து
சிந்தித்து
திருத்தி
திருந்து
நல்லதை நாடு
நாடியதை சரி செய்
சரி செய்ததை செம்மை செய்

கணினியும்
சீராக இயங்க
சுத்தம் செய்தலும்
புதிப்பித்தலும்
மேம்படுத்தலும்
புதுப்பித்தலும்
அவசியம்

கன்னியும்
முகநூலில்
நுழைந்தாலும்
கன்னியாகவே
வெளியேற
கவனம் செலுத்தி
கண்டதையும் காணாமல்
களங்கம் வராமல்
நல்லதை கற்று
அல்லவை ஒதுக்கி
புதுமை பெற்று
உயர்வு பெற்று
பெருமை பெற்று
சிறப்பு அடைதல்
சிறப்பு

Monday 17 November 2014

முத்தத்திற்கு ஒரு போராட்டமானால் முத்தங்கள் தன் மதிப்பை இழந்து விடும்

முத்தம் கொடுடி என்றேன்
உங்களுக்கு வேறு வேலை இல்லையா! என்றாள்

முத்தத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் என்றேன்
நீங்களும் போய் பேசுங்கள்
உங்களுக்கு வெட்கமில்லையென்றால் என்றாள்

நான் முத்தத்தை அறிந்துக் கொள்ள அங்கு செல்கிறேன் என்றேன்
இத்தனை காலங்கள் நீங்கள் கொடுத்தது அதுவல்லையாஎன்றாள்

உங்களை நான் தடுத்தாலும் எனக்கு அறியாமல் செல்வீர்கள்
நமக்குள் நடந்ததை சொல்லாதீர்கள் என்றாள்

பாசங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படும்போது நேசங்கள் உறுதியாக்கப் படுகின்றன

அன்பு ,பாசம் ,நேசம், காதல் அனைத்தும் இதயத்தின் வெளிப்பாடு
இதயத்தின் உணர்வுகள் இயல்பாய் உந்தப்படுவது
மழையால் கொட்டப்படும் நீரை தடை போட்டு நிறுத்த முடியாது
இதயத்தில் வெளிப்படும் நேசத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது

நேசம் ஒரு தெளிந்த நீரோடை
நேசத்தை நெஞ்சத்தில் நிறுத்தி வைக்காமல்
நேசத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்

Monday 10 November 2014

உள்ளங்கள் தூய்மையானால் அனைத்தும் சரியாகிவிடும்

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்
வயதை வைத்து மரியாதை கிடைக்கப் போவதுமில்லை
வயதைப் பார்த்து மட்டும் பார்த்து பெண் கொடுக்கப் போவதுமில்லை
வயது வந்தமையால் உய்ர்த்திவிடப் போவதுமில்லை
வயது வந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் தேவையா என்பார்கள்
கிழடான கவிஞன் கன்னிகளை கவிதையாக வர்ணித்தால் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவனும் இளமையானவனும்

அந்த நாட்கள் மீண்டும் வராது !

பார்த்தோம்
நண்பனானோம்
விளையாடினோம்
பகிர்ந்து அருந்தினோம்
கிடைத்ததை பாதியாக கடித்து கொடுத்து தின்றோம்
மின்சாரம் வருமென படிப்பதை தள்ளிப் போடவில்லை
கிடைத்த வெளிச்சத்தில் படிக்க வேண்டியதை படித்தோம்

தாகம் வர நினைத்த இடத்தில நீரை குடித்தோம்
தாகம் வர சுகாதார காப்ப்பீடு பெற்ற நீரை நாடவில்லை
ஹெல்மெட் அணிந்து வாகனம் ஒட்டவுமில்லை
கிடைத்த இடத்தில விளையாடினோம்
விளையாடுவதற்கு இடம் தேடி அலையவில்லை
மருத்துவரை நாடி போகவில்லை
மருத்துவர் வேண்டிய நேரத்தில் வீடு தேடி வந்தார்

கால மாற்றம்
பார்க்காமலேயே நண்பர்கள்
கருப்பு வெள்ளை நிறமில்லாது
நிறங்கள் கொடுக்கப்பட்டவர்கள் பார்க்காமலேயே நண்பர்கள் ஆகிறார்கள்
படங்கள் போட்டு உண்டதை காட்டி நம் பசியை தூண்டும் நண்பர்கள்
போடும் படங்களிலும் போலியானவைகளும் உண்டு
எதை வைத்து நண்பர்களானாலும்
வாழ்வில் பாராமலேயே நண்பர்களாக இருப்பார்கள்
இடைப்பட்ட காலத்திலும் எழுதும் வார்த்தைகள்
நண்பர்களை விலக்கியும் விடலாம்

-முகம்மது அலி ஜின்னா 


அடங்கி ,அடக்கி போனதால் வந்த கேடு

கோபம் வருவதுபோல் செயல்படுகின்றனர்
கோபத்தை அடக்கிக் கொண்டேன்

நீரை அதிகமாக குடித்து விட்டேன்
நீரை வெளியேற்ற பொருத்தமான இடம் கிடைக்கவில்லை
நீரை வெளியேற்றாமல் அடக்கிக் கொண்டேன்

சாப்பிட்டது சரியில்லை
வயிற்றை கலக்கியது
வந்ததை அடக்கிக் கொண்டேன்

பருவத்தில் திருமணம் செய்விக்கப் படவில்லை
பருவத்தில் வரும் விருப்பத்தையும் அடக்கிக் கொண்டேன்

அடக்கி அடக்கி ஆயிரம் வியாதிகள் வந்து சேர்ந்தன
அந்த பிரச்சனை மனிதர்களைத் தவிர மற்றதற்கில்லை

மற்றவைகளுக்கு அடக்கும் குணம் இல்லாமையால்
மற்றவைகளுக்கு வரும் வியாதிகள் மனிதருக்கு வருவதுபோல் வருவதில்லை

(நீர் வியாதி .இதய வியாதி அதிக அல்லது குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் சில..)

நான் எங்கிருந்தாலும் நானேதான்!

நான் 
ஊர்லே நவாப்ஷா
வெளியூர்லே பக்கிர்ஷா

ரோமுக்கு போனால் ரோமானியனாவேன்
ரோமானியர் என்னை அழைப்பதோ இந்தியன்
மேலப்பாளையம் போனால் மேலப்பாளையனாவேன்
மேலப்பாளையத்தில் உள்ளவர் என்னை அழைப்பதோ நீடூரான்

எங்கு இருந்தாலும் நான்
எப்படி இருந்தாலும் நான்

என்ன என்னிடம் இருந்தாலும் நான்
என்னை எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் நான்தான்
எனக்கு நானே எத்தனை பெயர் சூட்டிக் கொண்டாலும் நான்தான்
எனக்கு உயிர் உள்ளவரை அத்தனை பேரும் சுற்றி வரும்
என்னிடம் உள்ள உயிர் என்னை விட்டு அகன்றால்
என்னை விட்டு அத்தனை பேரும் அகன்றுவிடும்
அத்தனை பெயரும் எனக்கு புதுப் பெயர் சூட்டுவர்
எனக்கு சூட்டும் பெயர் மொவுத் (பிணம் )
எனக்கு அந்த பெயரும் சில மணி நேரங்கள் தான்
 
-முகம்மது அலி ஜின்னா 
*********************************************************************
 நான்????? வெகு இயல்பான தேடல் வரிகள்: வாழ்த்துகள்.
இராஜ. தியாகராஜன்
****************
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் உள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்!
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே
சுண்ணாம்பாய் வெண்சங்கு சூளையிலே சுட்டதுபோல்
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!
 
 

Monday 27 October 2014

நிறைவேறாத காதலாக இருப்பினும்..!

காதல் அனுபவம்

உன்னை ஒருவள் காதலிக்கிறாள்
உனக்கும் அவளிடம் காதல் உண்டு

அவள் காதலை மறைமுகமாக உன்னிடம் தெரிவித்து விட்டாள்
அவள் காதலை தெரிந்தும் அதனை விரும்பியும் அதனை நீ காட்டிக் கொள்ளவில்லை

காலம் கடந்தது
நீயும் பெற்றோர் உனக்கு திருமணம் செய்விக்க விரும்பியவளை திருமணம் செய்துக்கொண்டு நிம்மதியாக வாழ்வை மகிழ்வாய் கடத்துகிறாய்
அவள் நிலையும் அவ்விதே இருக்கும் !

நிறைவோடு அவள் உன் வாழ்வெல்லாம் வந்து காட்சி அளிக்கிறாள்
நிறைவேறாத காதலாக இருப்பினும்
நிலையாக மனதில் நிற்பவளாக அவள் உன் மனதில்
அழியாத கோலங்கள்
இதுதான்
இச்சைக்கு முக்கியம் தராத
உண்மையான காதல்

Mohamed Ali

எனக்கு பிடித்த ஒரு சொல்

எனக்கு பிடித்த ஒரு சொல்
உனக்கும் பிடித்திருக்குமென்று
எனக்கு பிடித்த உன்னிடம் சொல்ல
உனக்கு பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கி விடு
உனக்கு பிடிக்கவில்லையென்பதற்காக
ஓலமிட்டு ஊரை கூட்டுகின்றாய்
கூடிய மக்கள் அச்சொல்லின் உயர்வை அறியாரோ!

பொருத்தமான சொல்லை
பொருந்தியவளிடம்
பொருத்தமாக சொல்வதில் பெருமகிழ்வு
பொருளற்ற பல்லாயிரம் சொற்களை விட
பொருத்தமான காதலிக்கிறேன் என்ற சொல்
மேலானதாய் மனதில் பட்டது

காதலிப்பது தவறா
காதலை சொல்வதை தவறா
காதல் என்ற சொல்லே தவறா
ஊரைக் கூட்டி ஓலம் போடாதே

காதல் ஒன்று இல்லையனில்
உலகமே ஒன்றுமில்லாமல் போய்விடும்
 

Saturday 25 October 2014

நெஞ்சமெல்லாம் நிறைந்த வாழ்த்துகள் வாழ்வில் உயர்வைத் தர உதவுகின்றன


(கணவர்களாகிய) நீ்ங்கள் (மனைவிகளாகிய) அவர்களுக்கு ஆடையாகவும், (மனைவிகளாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். -

திருக்குர்ஆன்: 2:187

"நீங்கள் அமைதிபெற உங்களில் இருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

-திருக்குர்ஆன் 21:30
*********************************************************************

Thursday 23 October 2014

அறிய வாழ்வை உயர்வாக்கிக் கொள்ளல் வேண்டும்

விரும்பியது கிடைத்தது
விரும்பியது தேடியும் கிடைத்தது
விரும்பியது தேடாமலும் கிடைத்தது
விரும்பியது கிடைத்ததால் வாழ்வு மகிழ்வானது

வாழ்வில் நிறைவு பெற்றதால்
வாழ்வை தொடர விரும்பவில்லையென்று
யாரும் நிறைவாக சொல்வதில்லை

Monday 22 September 2014

எது குறைந்தாலும் எனக்கு உறக்கம் வராது

 
 
நான் நடுவில் படுத்துக் கொள்வேன்
எனக்கு இரு பக்கமும் இரண்டு பாசமானவர்கள்
நான் இவர்கள் என்னோடு உறங்குவதால் மகிழ்வடைகின்றேன்
எனக்கு இவர்கள் தரும் உணர்வுகள் நிறைவைத் தருகின்றன

ஒருத்தி இங்கும் அங்கும் அசைந்தாலும்
ஒருவர் ரீங்கார குறட்டை விட்டாலும்
அவர்கள் இருவரும் என்னை அணைத்து உறங்குவர்
இவைகள் எனக்கு பழகிப் போனது
இவைகளில் எது குறைந்தாலும்
எனக்கு உறக்கம் வராது

குழந்தையான மகளையும்
ஒன்றிவிட்ட கணவனையும்
ஒதுக்கி விட்டு என்னால் எப்படி உறங்க முடியும் !

ஸ்டேடஸ் போட வேண்டும்

நான் நிறைய பயணங்கள் செய்திருக்கின்றேன்
நான் பார்த்தவைகள் அதிகம்
நான் பார்த்ததிலிருந்து கற்றது குறைவு
குறைவை நிறைவு செய்ய முடியாது
குறைகளை நிறைவாக்க முயலலாம்
குறைவான நம்பிக்கை இல்லை
என்னை நானே சரி செய்துக் கொள்ள முயல வேண்டும்

பாணி பூரி


பள்ளிக்கூட வாசலில் பாணி பூரி விற்பவன்
பள்ளிச் சிறார்களுக்கு அதனை வாங்க நயமான வாரத்தைகள் சொல்லி அழைக்கின்றான்
செல்வந்தர் வீட்டு சிறார்கள் அதனை வாங்கி ஆசையோடு சாப்பிடுகிறார்கள்
அந்தக் கூட்டத்தில் கிழிந்த ஆடையோடு ஒரு பையன் பாணி பூரி வாங்க பணமின்றி மற்றவர்கள் சாப்பிடுவதையே பார்த்து நிற்கின்றான்
அவனது கண்களில் பான்பூரியை வாங்கி சாப்பிட முடியாத சோகம்
அவனுக்கு பசியால் அமிலங்கள் சுரக்க சிறிய வயிற்று வலி வருகின்றது
வலியை தாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகல்கின்றான்

பாணி பூரியை வாங்கி சாப்பிட்ட செல்வந்தர் வீட்டு சிறார்களுக்கு
வீடு சென்ற பின் ஒவ்வாமையால் ,செரிமானம் வராமையால் வயிற்று வலி அதிகமாகின்றது
அவர்களை அழைத்துக் கொண்டு அக் குழந்தைகளின் பெற்றோர்கள் மருத்துவரிடம் ஓடுகின்றார்கள்

Wednesday 17 September 2014

தவறாக புரிந்துக் கொள்ளும் பாசங்கள்


முதல் மகனுக்கும்
இரண்டாவது மகனுக்கும்
எப்பொழுதும் பிரச்சனைகள்தான்

முதல் மகனுக்கும்
மூன்றாவது மகனுக்கும்
அப் பிரச்சனைகள் வருவதில்லை

தாய் ஒரு குழ்ந்தை பெற்ற பின்
அந்த குழந்தையின் மீது கூடுதல் கவனம் செலுத்த
அந்தக் குழந்தை மீது தான் தன் அம்மாவின் பாசம் உள்ளதாக
நினைத்து முதலில் பிறந்தது தவறாக புரிந்து
தன தாயின் மீதும் தன் குழந்தையாக உள்ள தம்பியின் மீதும்
பகை முரண்பாடுகளாக,காழ்புணற்சியாக மாற்றமடைகிறது

அது சிறிது காலங்கள் கடந்த குழந்தையாய் இருந்தால் அது வருவதில்லை
இது பெண் குழந்தைகளுக்கு பொருந்தாது
பெண்கள் எக்காலாத்திலும் சகோதரிகளுக்குள் பாசங்களை பொழிவார்கள்
பாசங்களை பெறுவதற்கும்
பாசங்களை கொடுப்பதற்கும்
சகோதரிகளுக்குள் உயர்ந்து நிற்கிறார்கள்

தவறு செய்த மகன் மனம் மாறி திரும்ப மகிழ்வுதான்

(பைபிளில் Luke) பாடமாக படித்த நினைவு
The Parable of the Prodigal Son(a person who spends money in a recklessly extravagant way.)
(இது B.A. படிக்கும் போது கல்லூரியில் பாடமாக படித்தது .நினைவு உள்ளவரை சுருக்கமாக தருகின்றேன் )

இளைய மகன் தன் தந்தையிடமிருந்து தனக்கு தர வேண்டிய சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு தந்தை மற்றும் மூத்த சகோதரனை விட்டு பிரிந்து சென்று விடுகின்றார்

தவறான முறையில் வாழ்ந்ததால் சென்ற இடத்தில இருந்த அனைத்து சொத்துகளையும் விற்று வேலை செய்யும் நிலைக்கு ஆகி மிகவும் சிரமத்திர்க்குள்ளாகி தன் தவறை உணர்ந்து .அவர் மனம் மாறி திரும்பவும் தன தந்தையை நாடி வருகின்றார்

பாசங்களை பகிர்வதில் வெளிப்படை தன்மை வேண்டும்

குழந்தைகளாக இருக்கையில்
பெற்றோர்கள் பாசங்களை
வெளிப்படையாக காட்டினார்கள்

வளர்ந்த பின்
பெற்றோர்கள் பாசங்களை
வெளிப்படையாக காட்டுவதில்லை
பாசத்த்தை மனதில் நிறுத்தி
தவறு செய்தால் தண்டித்தார்கள்

பெரியோர் ஆன பின்
பெற்றோர்கள் தண்டித்ததுதான் மிகைத்து நிற்கின்றது
குழந்தைகளாக இருக்கையில்
பெற்றோர்கள் காட்டிய பாசங்கள் மறைந்து விடுகின்றன

இரு காலங்களிலும்
பெற்றோர்கள் காட்டியது பாசங்கள்தான்
பாசங்கள் பாவாங்களல்ல பாபங்களுமல்ல

பெற்றோர்கள்
நன்மைகளை நாடி கண்டித்ததை
தவறாக மனதில் பதியப் படுகின்றன
தவறாக மனதில் நின்றமையால்
பெற்றோர்கள் முதியோர்கள் ஆனா பின்
முதியோர்களை மதியா மனம் வந்தடைகின்றது

குழந்தையானாலும்
வளர்ந்தவனாலும்
கண்டிக்கும் முறைகளை
பாசங்களை வெளிப்படையாக தெரியும் வண்ணம்
அரவணைத்து அறிவுரைகள் தந்து
நண்பனாக
தத்துவங்கள் தருபவனாக
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டுபவனாக
பெற்றோர்கள் எக்காலத்திலும் இறுத்தல் சிறப்பைத் தரும்

சொல்ல வேண்டியதைச் சொல்



சொல்ல வேண்டியதைச் சொல்
சொல்லக் கூடாததை சொல்லாதே
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்
சொல்லக் கூடாததை
சொல்ல கூடாத தருணத்தில் சொல்லி விடாதே

செய்ய வேண்டியதைச் செய்
செய்யக் கூடாததை செய்யாதே
பதுமையாக படைக்கப் படவில்லை
வாய் உண்பதற்கு மட்டுமல்ல
வாய் பேசுவதற்கும் தான் தரப்பட்டுள்ளது
வாய் பேச
உதடுகள் அசைய
நாக்கு பிரள
இத்தனையும் ஒன்று சேர
அறிவும் அங்கு பயன் படுத்தப் பட வேண்டும்
இறைவன் நம்மை படைத்ததற்கே காரணம் உண்டு
காரணத்தை கண்டு அறிந்து
ஒவ்வொன்றும்
உபயோகப் பட வேண்டும்
அறிவைத் தேடு
ஆய்வை நாடு
அதன் சிறப்பை
மற்றவருக்கும் கொடு
இறைவனின் ஆற்றலை அறிந்திடு
இறைவனுக்கு நன்றி செலுத்து
இறைவனைத் தொழுது
சிறப்பை இரு லோகத்திலும்
பெற்றிட வாழ்வை உயர்வாக்கிக் கொள்
Mohamed Ali

Monday 15 September 2014

உன் படம் வேண்டாம்

உன் படம் வேண்டாம்
நீயே என் உள்ளத்தில் பதிந்து விட்டாய்

உனது கனிந்த கரங்களால் அணைத்துக் கொள்
உனது மென்மையான் உதடுகளால் கன்னத்தில் முத்தங்கள் கொடு
உனது உள்ளங் கைகளால் தலையில் தடவிக் கொடு
உனது மனதின் இசையால் உறங்கச் செய்து விடு

நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லி விடு
நான் உன்னைப் போலவே இருக்க விரும்புகின்றேன்

உனது அளவற்ற வாழ்த்துகள்
எனக்கு சிறப்பான வாழ்வைத் தரும்

உலகத்தில் பெற்ற அழகுகள் அனைத்தும்
உன்னால் நான் பெறப் பட்டவைகளே

அம்மா அணைத்துக் கொள்
அம்மா உன் அரவணைப்பில்
நான் உறங்க விரும்புகின்றேன்

அம்மா உன் மடியிலேயே சுவனம் உள்ளது
அம்மா உன் மடியிலேயே சுவனத்தின் சொத்துக்கள் நிறைந்துள்ளன

அம்மாவின் நினைவில் அவர்களுக்காக
அம்மாவுக்காக இறைவனிடம் வேண்டாத நாட்களில்லை

அம்மா மனதிலேயே உறைந்துவிட்டதால்
அம்மாவை மறந்தாலல்லவா
அம்மாவை நினைப்பதற்கு 

Wednesday 10 September 2014

இணைந்த வாழ்வையே நாடி நிற்க வேண்டும்

காட்டில் விலங்குபோல் அலைந்த மனிதன்
நாட்டிற்கு வந்ததால் சமூக விலங்கானான்

கருத்துகள் கொள்கைககள் மனிதனை வசப்படுத்துகின்றன
ரொட்டியும் வெண்ணையும் நிறைந்து கிடைக்க சித்தார்தங்கள்,கொள்கைகள் மறைந்து விடுகின்றன

மனிதன் உணர்ச்சியின் உணர்வுகளால் உந்தப் படுகின்றான்
மனிதனின் உணர்ச்சிகள் மாறுபட்டதாய் அமைந்து விடுகின்றன

Tuesday 9 September 2014

உறவும் நட்பும்

நாளாகும் நட்பை வளர்க்க
நிமிடம் போதும் நறுக்க
---------------
நட்பு தொடர தொடர்பு
இருந்துக் கொண்டே
இருக்க வேண்டும்
---------------
உறவுகளை இறைவன் தந்தான்
இறைவன் அருளால்
நல்ல நட்புகளை
நாம் தெரிவு செய்வோம்

உயிரினங்களில் உயர்வானது மனித இனம்
உணர்வுகளுக்கு முக்கியம் கொடுக்கும் மனித இனம்
உணர்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு வந்ததால்
உறவு முறையில் விரிசல் வர தொடக்கமானது
மனித இனத்தில் மேன்மையானது உறவும் நட்பும்
உறவையும் நட்பையும் தூரமாக்குவது பணமும் பொறாமையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்
அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
----------------------

Monday 8 September 2014

நம்பிக்கையற்ற நிலை

 
எதிலும் சந்தேகமும் பயமும்
------------------------------
நம்பிக்கையற்ற நிலை
நிர்ப்பந்ததின் கோளாறால் துன்புறுதல்
(கற்பனை கோளாறுகள் )
-------------------
சுத்தம்

சுத்தமாக இருப்பதில் கடுமை
சுத்தமாக இருக்கிறதா என்பதில் உன்னிப்பாக கவனித்தல்
சுத்தம் சீரான முறையில் கையாளப் பட்டதா என்பதில் கவனம்
----------
தன்னிலை வேலையில் சந்தேகம்

வீட்டின் கதவு சரியாக பூட்டப் பட்டதா
கையை முறையாக கழுகாமல் விட்டு விட்டேனா
ஆயத்தத்தில் எதையாவது தவற விட்டு விட்டேனா
இறை வணக்கத்தில் தவறு நிகழ்ந்து விட்டதா
--------------------
உடல் நிலை குறித்து

பையன் பத்திரமாக திரும்பி வருவானா
ஓரமாக நிற்கும் குழந்தை கிழே விழுந்து விடுமோ
உடல்நிலை பாதிக்கப் பட்டதால் இறந்து விடுவாரோ
வேகமாக செல்லும் ஊர்தியால் விபத்து நிகழ்ந்து ஆபத்தாகுமோ
பிரசவம் நல்ல விதமாக நடக்குமோ
----------------------
திட்டங்கள் குறித்து

பாஸ்போர்ட் ( நம் நாட்டிலிருந்து வெளிநாடு செல்ல நம் நாடு கொடுக்கும் அனுமதி)கிடைக்குமா
பாஸ்போர்ட் கிடைத்தாலும் விசா (அடுத்த நாடு உள் நுழைய அந்த நாடு கொடுக்கும் அனுமதி) கிடைக்குமா
விசாவுக்கு கொடுத்த பணம் விரயமாகுமோ
விசா கிடைத்தாலும் அந்நாட்டில்
வேலை கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ
----------------------
கோளாறின் காரணங்கள்

அதிர்ச்சி தரும் நிகழ்வுகள்
எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்திருக்கலாம்
பரம்பரையால் வரும் குணமாகலாம்
பிரசவ நிகழ்வின் நிலையால் வரவும் வாய்ப்புண்டு

மனக்கட்டுப்பாடற்ற நிலை
தன்னிலை குறித்து தனக்கே அதிருப்தி
தேவையற்ற எண்ணங்கள்
துன்புறு நிலை
கவலையை அதிகமாக்கிக் கொள்வது
ஒன்றைப் பற்றியே சிந்தித்து அது நிகழாமல் போவது
---------------------
தீர்வு

இறை நம்பிக்கை
நடப்பதுதான் நடக்கும் என்ற நம்பிக்கை
சிந்தனையை மாற்றும் நிலை
தேவையான உடல் வேலை,மற்றும் உடற் பயிற்சி
தேவையான,. மகிழ்வான பொழுது போக்கு
மக்களோடு கலந்து பழகுதல்
இழப்பை பற்றி கவலைப் படாமல் இருத்தல்

( இந்த கட்டுரை சிறு விளக்கம் . மருத்துவரீதியான ஆய்வுக்கு உட்பட்டதல்ல,மனோதத்துவக் கட்டுரையும் அல்ல. )
(hallucination = an experience involving the apparent perception of something not present. Imaginary illness)
- முகம்மது அலி 

மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு



கொடியில் கண்ட மலரை
கூந்தலில் சூட்டியதால்
மலரின் மணம் பரவ
மேணியின் அழகுக்கு கூடுதல் ஈர்ப்பு தர
அசையாத மனதையும் அசைக்க வைத்தது

அசைந்தாடி நடந்து வரும் மாதின் நடை நளினமாக காட்சித் தந்தது
நெருங்கி வந்த மாதிடம் பேச வார்த்தைகள் வர மறுத்தது
நெருங்கி வந்த மாது காத தூரம் சென்றிருப்பாள்
குறுக்கே வந்த வண்டி அவளை சிதைத்துச் சென்றது
கசங்கிய மலராய் அவள் அழகு அழிந்துப் போனது

நானும் நீயும்

 
நீ என்னோடு இருக்க வேண்டும்
நீ என்னோடு எப்பொழுதும் இருக்க வேண்டும்

நீ இல்லாமல்
நான் இருக்க முடியாது

உன் சேவை எல்லைகளுக்கு அப்பார் பட்டது
உன் சேவை தொய்வு இல்லாதது

நான் தனியாக நிற்க முடியாது
உன் மென்மையான கரங்களால் அரவணைத்துக் கொள்

உன் தேவை வேண்டி
நீ என்னிடமில்லை

என் தேவை வேண்டியே
நீ என்னுடன் உள்ளாய்

உன்னை போக விட்டு
நான் இருக்க முடியாது

நான் போக நேர்ந்தாலும்
நீ இருந்து உன் சேவை தொடர வேண்டும்

நான் ஆற்றிய பணிகள் அனைத்தும்
நீ கொடுத்த அர்பணிப்புகள் 

Saturday 30 August 2014

நடிப்பவரோடு சேர்ந்து நடிக்க மனம் இடம் தரவில்லை

அழுததைப் பார்த்து
மனம் நொந்தது
அழுபவரை அமைதிப் படுத்த முயன்றேன்

அழுவது போல் பாவனை செய்தாள்
மனம் சிரித்தது
அழுபவள் அழும் பாவனை
அடங்கும் வரை
கண்டு கொள்ளவில்லை

அழும் பாவனைக்கு
அழும் நடிப்புக்கு
ஆறுதல் சொன்னால்
அவசியமற்ற
செலவாகுமென
அறிந்துக் கொண்டேன

Thursday 28 August 2014

பெண் பார்க்க வந்தாயோ! பொருள் அடைய வந்தாயோ!

எம்மை பார்க்க வந்தாய்
எம்மீது போர்த்தப் பட்ட பொருளைப் பார்க்கிறாய்
எம்மை சுற்றியுள்ள பொருளைப் பார்க்கிறாய்
உம்மோடு வந்தவர்களும்
உமது குணத்தோடு ஒன்றி உள்ளனர்
உங்கள் செயல் வெட்கப் படுவதாய் இருக்க
உம்மைப் பாராமலேயே
நான் வெட்கத்துடன் நின்றேன்

மறைப்பதேன் !

 
மறைப்பதென்ன மகனே
ஒன்றுமில்லை அம்மா

கையில் ஒரு பை
பையில் ஒரு பொட்டலம்
மகனின் செயல் தாய்க்கு தெரியாதா
வாங்கியது தான் வாங்கினாய்
வாங்கியதில் கொஞ்சம் சேர்த்து வாங்கலாமே
சேர்த்து வாங்கியிருந்தால்
உனது மனைவிக்கு கொடுப்பதோடு
உனது சகோதரிகளுக்கும் சேர்த்து கொடுக்கலாமே

நீயும் உன் மனைவியும் மகிழ்வதோடு இருக்க
உங்களோடு சேர்ந்து அனைவரும் மகிழ்வார்களே

பூவும் இனிப்பும் யாவரும் விரும்பும் பொருளாக இருக்க
பகிர்ந்து கொடுக்க யாவரும் உங்களை வாழ்த்தி மகிழ்வார்கள்

Monday 25 August 2014

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர

உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை
உன் உடல் அசைவு தரவில்லை

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்


.பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்க ...

செய்தி துறையை ,பத்திரிகை துறையை ஆள்பவர்கள் முதலாளிகளும் (கார்பரேட் நிறுவனங்கள் ) ஆட்சி செய்பவர்க்களுமாக உள்ளார்கள் .
நல்ல மனம் கொண்டவர்கள் பத்திரிகை நடத்தினால் மக்கள் அப் பத்திரிகையை வாங்குவதில்லை .
அதற்க்கு விளம்பரங்களும் கிடைக்காமல் நஷ்டமாகி பத்திரிகை நிறுத்தப் படுகின்றது .
கலைக்கதிர்,மஞ்சரி போன்ற பத்திரிகைகள் செய்த சேவைகள் அதிகம் .ஆனால் அப் பத்திரிகைகள் இப்பொழுது இல்லை .

உன்னைப் பார்த்தாலே அடிமை

உன்னைப் பற்றி உயர்வாய் சிலர் சொன்னார்கள்
உன்னைப் பார்த்தாலே அடிமையாய் விடுவாய் என்று சிலர் சொன்னார்கள்

பலர் பலவிதமாகச் சொல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் அதிகமானது
உன்னிடம் வந்தவுடன் பலர் பலவிதமாகச் சொல்வதிலும் உண்மை இருப்பதாக அறிகின்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்
உன்னைப் பார்த்த பின் பிரிய மனமில்லை

Saturday 23 August 2014

போய் விடு! பொருத்தமானால் வந்து விடு!



உன் இதழ்கள் புன்னகை பூக்க விரியவில்லை
உன் நாக்கு புரளவில்லை பேசுவதற்கு
உன் மனம் கசியவில்லை பாசத்திற்கு
உன் உடல் அசைவு தரவில்லை தேவையானதிற்கு

உன்னை இனியும் இங்கு இருக்கச் சொல்லவில்லை போய் விடு
உன்னை அழிக்க விரும்பவில்லை போய் விடு
உன்னை உயர்வாக்கிக் கொள்ள இங்கிருந்து போய் விடு
உன்னை பாதுகாத்ததாக நிறைவு கொள்கின்றேன் போய் விடு

ஒருமித்த கருத்துகள் ஒன்று சேர
இரு மனங்கள் ஒன்று சேர
இயல்பாய் இங்கிருக்க
இவ்விடம் வந்து விடு
இணைந்து செயல் படுவோம்

Tuesday 19 August 2014

பெரும்பான்மையோரிடம் பெரிய மனப்பான்மை இல்லை



பெரும்பான்மையோரிடம் பெரிய மனப்பான்மை இல்லை
பெரும்பான்மை தாழ்வு மனப்பான்மை பெற்று சிறுபான்மையை சோதிக்கின்றது
பெரும்பான்மை சிறுபான்மையை கண்டு கொள்ளாமல் சிதறடிக்க திட்டம் போடுகின்றது
சிறுபான்மை ஒன்று சேர பெரும்பான்மை சிறுபான்மையாகும்

குடும்பத்தில் பெரியவர்கள் சிறியோர்களை சிறப்போடு கண்காணிக்க
சிறியோர்கள் பெரியவர்கள் ஆனபின் பெரியோர்களை கணிகோடு கண்காணிப்பர்
குடும்பமென்றால் பெரியோர்களும் சிறியோர்களும் அடங்கியதுதான்
நாடென்றால் பெரும்பான்மையும் சிறுபான்மையும் சேர்ந்ததுதான்
உடலில் ஒரு பகுதியில் புற்று நோய் வர உடல் முழுதும் பரவி உடலையே பாதிக்கும்
உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் உயர்வு
நாட்டில் ஒவ்வொரு மக்களும் உயர்வடைய வேண்டும்/In matters of conscience, the law of the majority has no place.
- Mahatma Gandhi/ தன்னலமற்ற அறிஞனின் இழப்பும் அவனுக்கு வெற்றிதான்
தன்னலமற்ற அறிஞன் இழப்பாக மற்றவருக்கு விட்டுச் செல்வது அவனது அறிவை

தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்



தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது 
 
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது
  

Wednesday 13 August 2014

பயணம் புறப்படு முன்

ஒருவர் பயணம் போகும் பொழுது ..
அவரை வாழ்த்தி அனுப்புகின்றோம்
அவரிடம் பயணத்தில் உள்ள சிலருக்கு 'சலாம்' வாழ்த்துகள்
சொல்லச் சொல்கின்றோம்
அல்லது சில பொருட்களை மற்றவருக்கு கொடுக்கச் சொல்கின்றோம்
அவர்கள் சரி என்று உடன்படுகின்றார்கள்
இதில் ஒரு உயர்ந்த உண்மை ஒளிந்திருக்கின்றது
அவர்  ஒப்புக் கொண்டு கொண்டுச் செல்வது அமானிதப் பொருள்
அந்த அமானித பொருளும் அல்லது அந்த அமானித வாழ்த்தும்
அவர்களது பயணத்திற்கு ஒரு பாதுகாப்பாக அமைந்து விடுகின்றது
பொறுப்புகளை முழுமையாக ஏற்று, அமானிதத்தை பொறுப்புணர்வோடு நிறைவேற்றும் மனிதர்களுக்கு இறைவன் பாதுகாப்பு தருகின்றான்
பயணம் செல்வதற்கு முன்
இறைவனிடம் பயண பாதுகாப்பு நாடி
இரண்டு ரகாயத் நபில் தொழுவதும் உயர்வானது .



 Mohamed Ali- முஹம்மது அலி
------------------------------------------------------------------------

சேருமிடம் சேரும் வரை நமது தீர்மானங்கள் யாவும் ...

வெயிட்டிங் லிஸ்டில் தான்
....இப்படி சொன்னவர் ...

மஸ்கட் டூ சென்னை விமானத்தில் என் அருகிலிருந்த நர்ஸ் மிஸ்ஸியம்மா ...ஜெர்மனியிலிருந்து ஒமான் ஏர்வேஸில் வருகிறார்.

உண்மையும் அது தானே .....நண்பர்களே.


Iskandar Barak

ஒளி தரக் கூடியவள்


முத்து விழிகளை கொண்ட கண்கள்,
தலை முடியில் தங்கச் சரங்களை கோத்து நிற்க
பொங்கி வரும் ஆரம்ப நீரூற்றுகள் போன்று
மங்காத அவள் மனம் மகிழ
கோவைப் பழத்தை ஒத்த செவ்விதழ்களில் புன்னகை பூக்க .
உதிரும் சொற்கள் முத்துச் சொற்களாக சிதற
பெண்மையின் நளினம் மேன்மைப் படுத்த
மணப்பெண் பார்க்க வந்தவர்கள் மனதில் மகிழ்வு சேர
உறுதிபட சொல்லிச் சென்றார்கள்
இப் பெண்ணே எங்கள் வீட்டற்கு ஒளி தரக் கூடியவள் யென்று

Friday 1 August 2014

இனி இருக்கப் போகும் வாழ்வில் ..

காதலை அறிந்துக் கொள்ளவில்லை
காதல் அழகில் அடங்கிப் போனதாக அறிவு மங்கிப் போனது

அழகை நாடி அலைபாயும் மனம்
உண்மையை நாடாமல் சிதைந்துப் போனது

காதல் நேசத்தில் உள்ளடங்கியதனை
சேவை இதயத்தின் ஒளியானதென்பதனை
கடந்த காலங்கள் உணர்த்திவிட்டன

இனி இருக்கப் போகும் வாழ்வில்
உன்னோடு உயர்வாக வாழ்வை தொடர்வேன்

நேசிக்கின்றேன் உன்னை உயிர் உள்ளவரை
நேசிகின்றேன் உன்னோடு இருப்போரையும்

உங்களுக்கு சேவை செய்வதிலேயே
எந்தன் மனம் உவகை கொள்ளும்