Friday 21 February 2014

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது

ஆனந்தத்தை அறுவடை செய்ய ஆளாக்கிக் கொண்டவன் நீ
துன்பத்தில் துவண்டு சுழல்பவன் நீ

சிறியதை பெரிதாக்க முயல்பவன் நீ
பெரிதானதை சிரிதாக்கியவனும் நீ

உன்னை உருவாக்கிய உயர்ந்தவனை மறந்தவனும் நீ
பணத்தை பெரிதாக நினைப்பவனும் நீ

அகங்காரத்தை தன்னகத்தே கொண்டவனும் நீ
உனைப் பெற்ற பெற்றோரையும் மறந்தவன் நீ

உனது நரம்புகள் உனது ஆணைக்கு உட்படாது
உன்னால் வந்தவர் உனை ஒதுக்கி நிற்பார்
உன்னையே நீ அறிவாய்
உனக்கு உதவ ஒருவரும் வர மாட்டார்
உழன்று பிரண்டாலும் போனது போனதுதான்

ஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது
ஓரிறைவன் கொள்கையை உயர்த்தி
உன்மனதில் நிறுத்தி வாழ்ந்திடு
ஓரிறைக் கொள்கை கொண்டதால்
உன்னையே நீ அறிந்துக் கொண்டாய்
உன்னிறைவனையும் புரிந்துக் கொண்டாய்
போகுமிடமும் விளங்கிக்  கொண்டாய்
சொல்லிகொண்டே இரு இறைவனின் பெயரை
திருக் கலிமாவின் மகத்துவத்தை அறிந்து செயல்படு
இறைவனின் மன்னிப்பை மனதோடு வேண்டிக் கொண்டே இரு
போகுமிடத்திலாவது (இறைவன் விரும்பினால்) நல்லதோர் இடம் கிடைக்கும்

No comments:

Post a Comment