Saturday 15 March 2014

நோக்கத்தை வைத்தே அறுவடையின் பலனும்

நோக்கத்தை வைத்தே செயலின் தேடல்
நோக்கத்தை வைத்தே செயலின் முடிவும்

நாட்டை விட்டு போனான் நாலுகாசு சேர்க்க
நாட்டை விட்டு போனவனுக்கு வீட்டு நினைவு வர

தொடுத்த நோக்கம் தொலைந்து விட
யெடுத்த செயலில் தொய்வு விழுந்தது

கல்வி கற்க சென்றவன் கசடை அள்ளி வந்தான்
பொருள் சேர்க்க சென்றவன் பொருளை விட்டு வந்தான்

மரம் வெட்ட போனவன் மனிதனை வெட்டி வந்தான்
நோக்கம் அற்று போனவன் நேயத்தை அழித்து வந்தான்

காதல் கொண்டவர் நேசத்தை வைத்து காதல் வசப்பட்டார்
காதல் காரண காரியத்தை வைத்து வருவதில்லை

காமம் மிஞ்சியவனுக்கு காதல் வர வாய்பில்லை
காதல் அற்ற நிலையில் கன்னியை கலங்க வைப்பவன் காமுகன்

வளர்ப்பு முறை தவறாய் இருக்க
வாழும் முறையும் தவறாகி விட வாய்புண்டு

அம்பை எய்தவன் ஒருவனிருக்க
அம்பை நோவதேன்

தாய் தந்தையை மறந்தவனுக்கு தன்னிலை பெரிதானது
தனக்கும் அந்நிலை வர தாய் தந்தை நிலை அறிய வரும்

 Rasul Allah (sal Allahu alaihi wa sallam) said: “It is enough sin for a person, that he ignores those whom he is responsible for.” [Abu Daud]

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் - 1)

No comments:

Post a Comment