Monday 17 March 2014

இவன் ஆட்சி செய்தால் நாட்டில் ஏது வெளிச்சமும் ஒற்றுமையும்

கூரை வீடு
ஒட்டு வீடு
மாடி வீடு
வீட்டின் தோற்றம் மாறியது
வெளியூரிலிர்ந்து குடி வந்து
வருடங்கள் பல ஆகின .
வீட்டின் தோற்றமும் மாறின
வெளியூரிலிர்ந்து குடி வந்ததால்
வீட்டிற்க்கு உரிமையாளர் ஒரு பெயர் சூட்டினாலும்
இருக்கும் ஊர்  மக்கள் அனைவரும்
வந்த ஊரின் பெயரை சொல்லி பட்டம் சூட்டிஅழைக்கின்றனர்

பட்டிக்காட்டு மக்களுக்குத்தான் இந்த குணம் என்று நினைத்தேன்
படித்தவனும் ஜாதி மற்றும் இனவெறி கொண்டு, குறுகிய மனம் கொண்டு
இங்கு பிறந்த, இந்நாட்டு மக்களை வெளி நாட்டிலிருந்து வந்தோர்
என்று அழைக்க நாடுகின்றனர்
இவன் பட்டணம் வந்தும் பல் கல்வி கற்றும் பண்படவில்லை
என அறித்துக் கொண்டேன் .
இவன் ஆட்சி செய்தால்  நாட்டில் ஏது வெளிச்சமும் ஒற்றுமையும்

No comments:

Post a Comment