Tuesday 18 March 2014

இறைவனை இறைஞ்சு இன்ஷா அல்லாஹ் இனியவை நிகழும்

எல்லா நிலைகளிலும் இன்னிலையில் இருக்கப் போவதாக நினைக்கிறாய்
இல்லா நிலையிலிருந்து இன்னிலைக்கு உருவாக்கியவனை நினைக்க மறந்தாய்

எவ்வழியில் போவதென்றும் அறிந்தவனாய் இல்லை
எவ்வழியிலிருந்து வந்தவனென்று அறிந்தவனாய் இல்லை

உயிர்பெற்று விழும்போது கதறினாய்
உயிரற்று விழும்போது கதறுவார்கள்

உயிரோடு விழும்போது தாங்கிப் பிடித்தது பூமி
உயிரற்று விழும்போது விழுங்க வைத்து மூடி விடுவர் பூமியில்

ஆத்மா நிலையிலிருந்து ஆன்மா நிலைக்கு மாறினாய்
ஆன்மா நிலையில் உனை உயர்வாக்கிக் கொள்ள
ஆத்மா நிலையில் உயர் நிலையில் வாழ்ந்து விடு
ஆன்மாவும் ஆத்மாவும் இறைவன் அருள் பெற உயர்வாகி விடும்


தவறு செய்து தன்னையே வருத்திக் கொள்கிறாய்
தவறைக் கொண்டு தன்னை திருத்திக் கொள்ள முயல்வதில்லை

நம்பிக்கையை இறைவன் மீது வை
நம்பிக்கை இறைவன் மீது வைக்க வழி பிறக்கும்

இறைவன் உன் அருகில் இருக்கிறான்
இறைவன் காட்டிய வழியை உன் பாதையாக அமைத்துக் கொள்

இறைவனை இறைஞ்சு
இன்ஷா அல்லாஹ் இனியவை நிகழும்

No comments:

Post a Comment