Thursday 27 March 2014

அம்மா இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியவில்லை!

அம்மா இருக்கும்போது அம்மாவின் அருமை தெரியவில்லை
அம்மாவான பின் அம்மாவின் அருமை தெரிகின்றது

பிள்ளையாக இருக்கும் போது அம்மாவுக்கு கொடுத்த தொல்லைகள் தெரியவில்லை

அம்மாவான பின் பிள்ளைகள் கொடுக்கும் தொல்லைகள்
அம்மாவுக்கு நான் கொடுத்த தொல்லைகள் தெரிகின்றது

அம்மா இருக்கும்போது அம்மாவைப் பற்றி ஒரு வரியும் எழுதவில்லை
அம்மா இறந்த பின் அம்மாவைப் பற்றி யார் எழுதினாலும்
அம்மாவின் நினைவு மனதில் வரிகளாக பதிகின்றன

அம்மா அழைக்கும் போது திரும்பிப் பார்க்கவில்லை
அம்மா இறந்த பின் 'அம்மா ' என்று யார் அழைத்தாலும் திரும்பிப் பார்கின்றேன்

'அம்மாவின் மடியில் சுவனம் உள்ளது' என்பது நாயகம் நவின்ற மொழி
அம்மாக்கள் இருக்கும் காலமெல்லாம் அம்மொழி இருந்துக் கொண்டே இருக்கும்

அம்மாக்கள் இல்லாமல் குழந்தைகள் இல்லை
அம்மாவும் குழந்தைகளும் இல்லாமல் உலகமில்லை

No comments:

Post a Comment