Monday 24 March 2014

ஒதுங்கி வாழ்ந்தால் ஒதுக்கி விடுவார்கள்

நான் அறிவது என் குடும்பம்
என்னை அறிவது என் குடும்பத்தினர்

என்னை மற்றவர்கள் அறிய மாட்டார்கள்
எனக்கு மற்றவர்களைத் தெரியும்

நான் மற்றவர்கள் அறிய
நான் ஏதாவது செய்ய வேண்டும்

நான் ஒதுங்கி வாழ்ந்தால்
என்னை மற்றவர்கள் ஒதுக்கி விடுவார்கள்

நான் வாழ விரும்புகின்றேன்
நான் மாண்ட பின்னும் வாழ விரும்புகின்றேன்

நான் மாண்ட பின்னும் வாழ மக்களுக்கு நன்மை செய்தாக வேண்டும்
நான் மாண்ட பின்னும் என்னோடு வருவது நான் செய்த நன்மைகளே

நான் இருக்கும்போது மற்றவர்களை அழ வைத்தால்
நான் மாண்டபோது மற்றவர்கள் சிரிப்பார்கள்

நான் இருக்கும்போது மற்றவர்களை சிறப்பித்து சிரிக்க வைத்தால்
நான் மாண்டபோது மற்றவர்கள் என்னை நினைத்து அழுவார்கள்

எனக்காக மற்றவர்கள் சிந்தும் கண்ணீர்
என்னை சுவனத்தில் சேர்த்து வைக்கும்
#நன்மைகள்

No comments:

Post a Comment