Thursday 27 March 2014

என் நினைவில் எப்போதும் என் தாய்


மனதில் ஒரு வலி,

இப்பொழுது எனது தாய் இறைவனிடத்தில்
இன்னும் நான் ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளை ..

காலங்கள் கடந்து விட்டன
நான் சில பிள்ளைகளுக்கு தாய்
தயாகியும் என் தாய் என் இதயத்தில்
நான் என் குழந்தைகளுக்கு கொடுத்த முதல் முத்தம் நினைவிலில்லை
எனக்குத் தெரிந்து என் தாய் எனக்கு கொடுத்த முதல் முத்தம் இன்னும் என் நினைவில்

தாயை நினைத்து மனதில் துடிப்பு
என் இதயத்தில் எப்போதும் என் தாய் நினைப்பு
என் தாயை நான் மறக்க முடியுமா !

என் நினைவில் எப்போதும் என் தாய்
என் தாயை திரும்ப என்னிடம் கொடு இறைவா என்று கேட்பதில்லை
என் தாயை சுவனத்தில் இருக்கச் செய்து நீ என்னை உன்னிடம் அழைக்கும்போது
என் தாயோடு என்னை இருக்கச் செய்து விடு என்று வேண்டாத நாளில்லை

No comments:

Post a Comment