Thursday 3 April 2014

காதல் மோகம் வீரத்தை போக்கியது

நாட்டை வெல்ல வேண்டும்
நாட்டின் நிலை அறிய வேண்டும்

மறைமுக ஆய்வு அந்த நாட்டின் நிலை அறிய ஒரு தூதர் அனுப்பப் பட்டார் மன்னரால்
இப்பொழுது நிலமை நமக்கு சாதகமாக இல்லை .

ஒருவர் அம்பை வைத்துக்கொண்டு அழுது கொடிருந்தார் .ஏன் அழுகிறாய் என்று கேட்டதற்கு 'நான் விட்ட அம்பு நான் வைத்த குறியிலிருந்து தவறி விட்டது . என் நாட்டிற்குள் எதிரிகள் புகுந்தால் நான் வைத்த ஒரு அம்பின் குறி கூட தவறக் கூடாது' என்றார்.
சிறுவர்கள் கூட அம்பு விடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் என தூதர் சொன்னார்.இவைகள் அவர்களது தீரத்தையும் ,வீரத்தையும் காட்டி நிற்கின்றது .அவ்வித நோக்கம் கொண்டவர்களை தோல்வியடையச் செய்வது இயலாது என்றார்.


சில காலங்கள் சென்ற பின் மறுபடியும் தூதர் அனுப்பப் பட்டார் மன்னரால்
இதுவே சரியான தருணம் .இப்பொழுது நாம் அந்நாட்டின் மீது படையெடுத்தால் வெற்றி கொள்ளலாம் என்று அந்த தூதர் மன்னரிடம் சொன்னார்.

அந்த தூதர் அந்த முடிவுக்கு வந்த காரணம்
அந்த நாட்டில் அவர் கண்ட காட்சி

கடற்கரை ஓரம் ஒரு வாலிபன் மனம் கலங்கி அழுது நிற்கின்றான்
அவன் அழுவதற்கு சொன்ன காரணம் அவன் காதலி கொடுத்த மோதிரம் கடல் அலைகளால் அடித்துச் செல்லப் பட்டு விட்டதாம் அதனால் அவன் மனம் தாங்காமல் அழுகிறானாம்

அந்நாட்டு மக்களிடம் வீர குணம் மறைந்து போனதற்கு இதுவே அவருக்கு ஒரு காரணமாக அமைந்தது.
இது ஒரு வரலாற்று நிகழ்வு

No comments:

Post a Comment