Monday 14 April 2014

தானே உயர்வு என்று தாளம் போட்டாய்

மேகம் போல் வந்து மறைந்தாய்
மேகம் குளிர்ந்து பனிக்கட்டியாய் கொட்டுவதுபோல் கொட்டினாய்
மேகம் வருவதைக் கண்டு மழை வரும்
செடிகள் வளருமென நம்பினோர் ஏமாற்றமடைந்தனர்
பனிக்கட்டியைக் கொட்ட பிடித்திருந்த கொடையும் கிழிந்தது
வானவில் தோன்றி மறைந்தால் நிறங்கள் மறைந்து போகும்

எல்லாம் எதிர்மரையாய் வந்து ஏமாற்றத்தை தந்து போனாய்
வார்த்தைகளில் புரியாத மொழியை புகுத்தினாய்
நயம்பட பேசாமல் கொடுஞ் சொற்களை கொட்டித் தீர்த்தாய்
நயம்பட பேசாமையால் முகம் கடுமையாய் காட்சி தந்தது
முதலிலேயே மனதில் நல்ல எண்ணம் வரவைக்க உன்னால் முடியவில்லை
தானே உயர்வு என்று தாளம் போட்டாய்
பக்க தாளம் போட்டவர்களும் உன் தாளத்திற்கு ஒப்பு தாளம் போட்டனர்
ஒன்றுமே உண்மையாய் இணைந்து வரவில்லை
உள்ளத்தில் உண்மை இல்லாமையால் அனைத்தும் போலியாய் போயின
கனவிலும் நினைவிலும் மனதில் அச்சுறுத்துகிறாய்
அச்சப்பட்டே அழிந்து போன சமூகத்தை கண்ட வழியைப் பார்த்து
அச்சப்படுத்துவதின் மேல் உனக்கு ஒரு பிடிப்பு
விழுந்தவர் எழுவார்
எழுந்தவர் பாடம் புகட்டுவார்

No comments:

Post a Comment