Thursday 24 April 2014

கடமையை செய்யாமல் உரிமை கேட்பது முறையல்ல

எனக்கு வாக்குப் போடும் உரிமை கிடைத்த காலத்திலிருந்து நான் வாக்கு போடுகிறேன்
வாக்கு போடுவது எனது கடமை மற்றும் உரிமை
கடமையை செய்து விட்டு உரிமையை நாடுகின்றேன்
கடமையை செய்யாமல் உரிமை கேட்பது முறையல்ல
கடமையை செய்வதனை பெருமையாக பேசுவதிலும் உயர்வில்லை
கடமையை செய்ய விடாமல் தடுப்பதும் உரிமையல்ல
'கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு' இவைகளை பேணுபவருக்கு கிடைக்கும் உரிமை உயர்வானது
கடமையை கண்டு கொள்ளாதவன் தனக்கு மற்றவர் செய்ய வேண்டிய கடமையை விரும்புகின்றான்

மகன் தந்தைக்கு செய்யும் கடமை
தந்தை மகனுக்கு செய்ய வேண்டிய கடமை
இவ்வாறு பல கடமைகளில் மக்கள் தன்னை ஆட்படுத்திக் கொள்ளும்போது அனைவரும் நலமாக இருக்கிறார்கள்
கடமைகளில் மிகவும் முக்கியமானது நாம் வாழும் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை
அந்த கடமைகளில் ஒன்றாக இருப்பது நாட்டின் தேர்தலில் வாக்கை பயன் படுத்துவது

இங்கிலாந்து நாட்டு பாராளுமன்றத்தில் ஒரு முக்கிய வாக்கெடுப்பில் மிகவும் பிரபலமானவர் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமையால் அடுத்த தேர்தலில் அந்நாட்டு மக்கள் அவருக்கு வாக்கு போடாமல் தோல்வி அடையச் செய்தனர் ,

நாம் வாக்குப் போட்டு பாராளுமன்றதிர்க்கு அனுப்பும் உறுப்பினர் முக்கிய விவாதத்திலும் கலந்துக் கொள்ளாமல் அதன் வாக்கெடுப்பிலும் கலந்துக் கொள்ளாமல் இருப்பது அவர் அந்த உறுப்பினர் பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவராக ஆக்கப் பட வேண்டும்
#வாக்கு

No comments:

Post a Comment