Thursday 1 May 2014

வேதனையற்ற மனம்

இறப்பு நிகழ்ந்தது
வந்தவர் விசாரித்தனர்
வந்ததற்கு அழுதும் சென்றனர்
இழந்தவர் அமைதி காத்தார்
இழந்தவர் விழிகளில் கண்ணீர் வரவில்லை
வந்தவர் இழந்தவர் முகத்தில் வாட்டம் காணாததைக் கண்டு வியந்தனர்
இழந்தவர் முகத்தில் வாட்டம் வராத காரணம் அவரே அறிவார்
இறந்தவர் இருக்கும் போது இழந்தவரை நோகச் செய்தபோது
இழந்தவர் வருந்தி விட்ட கண்ணீர் அளவற்றது
இழந்தவர் இறப்பை நினைத்து வருந்தவில்லை
இழந்தவர் கண்களில் நீர் வற்றிப்போனதால்
இழந்ததை வருந்தி வடிக்க விழிகளில் நீர் இல்லை

by-Mohamed Ali

No comments:

Post a Comment