Saturday 10 May 2014

அடுப்பங்கரை வேலை அவளுக்கு அலுப்பைத் தரவில்லை

ஓயாத வேலை
ஓய்வே இல்லை

ஒன்பது பேரைப் பெற்றாள்
ஒன்பது பேரும் உட்கார்ந்து உண்ண

அடுப்பங்கரை வேலை
அவளுக்கு அலுப்பைத் தரவில்லை
அவள் பெற்ற பிள்ளைகளுக்கும்
அவள் பெற்ற பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் சமைத்துப் போட

அவள் பெற்ற பிள்ளைகளின் மகிழ்வே
அவளது மகிழ்வாய் இருந்தது

அம்மா என்றும்
அம்மம்மா என்றும்
அத்தம்மா என்றும்
அவர்கள் அழைக்கும் போது
அவளின் மனம் நெகிழ்ந்து விடும்

அவளின் கணவனோ
அவளின் மகிழ்வில்
அவனும் மகிழ்வான்
அவன் மனதிற்குள்
அவனையறியாது மனம் வருந்துவான்
அவனது துணைவி தொய்வில்லாது உழைப்பதைக் காண


பட உதவி செய்து தந்த அமானுல்ல்லாஹ் மரைக்காயர் அவர்களுக்கு நன்றி

No comments:

Post a Comment