Saturday 3 May 2014

முடித்து விடுவதிலேயே கவனம்


கடமையாக நினைத்து மகள் திருமணத்தை முடித்து விடு
மகள் வளர்ந்து விட்டாள் ஊரார் ,உறவினர் பேசுவார் திருமணத்தை முடித்து விடு
மகள் படித்து விட்டாள் படித்த மணமகனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு அழகான மணமகனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு செல்வந்தனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு பெருமை சேர புகழ் பெற்ற குடும்பத்தில் திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு திருமணம் ஆனால் அவள் சொல் பேச்சை கேட்பவனைப் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு திருமணம் ஆனபின் மகள் வீட்டுக்கு வரக் கூடியவனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகள் திருமணம் ஆன பின் தனிக் குடுத்தனம் நடத்துபவனாய் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
மகளுக்கு நல்லொழுக்கம் கொண்டவனாய்ப் பார்த்து மகளுக்கு திருமணத்தை முடித்து விடு
-------------------------------------

நபிமொழி
அறிவிப்பாளர் : அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!” (புகாரி, முஸ்லிம்)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் நவின்றார்கள்: “பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய அழகு அவர்களை அழித்துவிடக் கூடும். பெண்களைச் செல்வந்தர்கள் என்பதற்காக மணம் முடிக்காதீர்கள், அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும் அடங்காப் பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும். மாறாக மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment