Friday 9 May 2014

ஒருவர் வேண்டியவரேன்றால் மற்றவர் வேண்டாதவறல்ல


ஒருவர் வேண்டியவரேன்றால்
மற்றவர் வேண்டாதவறல்ல

தாய் ஒருவர்
தந்தை ஒருவர்

மற்றவர் பலர்
மற்ற பலர் பலவகையில் உயர்ந்தோர்

பலரிடம் பழகிறேன்
சிலரிடம் நெருங்கிப் பழகின்றேன்

ஒவ்வொருக்கு ஒவ்வொரு குணம்
ஒவ்வொருக்கு ஒவ்வொரு திறமை

திறமையை கண்டறிவதில் தேர்வு வைப்பதில்லை
குணத்தை கண்டறிவதில் தேர்வு வைப்பதில்லை

திறமையும் மாறும்
குணமும் மாறும்

மாற்றத்தோடு மாற்றிக் கொள்கின்றேன் என்னை இழக்காமல்
காலங்கள் மாற்றத்தைக் கொண்டது என்னையும் அது இணைத்துக் கொள்கின்றது

சூழ் நிலைகள் மனிதனின் நிலையை மாற்றும் ஆற்றல் கொண்டது
சூழ் நிலைகளை மனிதன் உயர்நிலையாக்கும் ஆற்றலை பெற வேண்டும்

ஊரில் உன்னை அறிந்தவர் பலர் (ஊரில் நவாப் )
வெளி ஊரில் உன்னை அறியாதோர் பலர் (வெளியூரில் பக்கிர் )

ஊரில் உனக்கென ஒரு அடையாளம்
ரோமில் இருக்கும்போது ரோமனின் அடையாளம் அறிய வேண்டும்

அரசன் வேடம் போட்டு பிச்சை யெடுக்க முடியாது
பிட்சைக்காரனாக இருந்து அரசனாக இருக்க ஆசைப்படக் கூடாது

நிதர்சனம் அறியாதவன் தற்குறி
தன்னை அறியாதவனும் தற்குறிதான்

உன்னையே நீ அறிந்தால்
உன்னிடமுள்ளதை உயர்வாக்கிக் கொள்வாய்


No comments:

Post a Comment