Thursday 1 May 2014

தர்க்கம்

தெருவில் நடந்த தர்க்கம் தெருச் சண்டையானது
தொலைகாட்சியில் நடந்த தர்க்கம் குழப்பத்தை தந்தது
வீட்டில் நடந்த தர்க்கம் குடும்பத்தை பிரித்தது
மனைவியிடம் நடந்த தர்க்கம் ஊடல் ஆனது
நண்பர்களுடன் நடந்த தர்க்கம் பிரிவைத் தந்தது
கொள்கைக்காக நடந்த தர்க்கம் பல கட்சிகளானது
விதியைப் பற்றி செய்யும் தர்க்கம் வீணர்களின் செயலானது
விதியைப் பற்றி தர்க்கம் செய்வோர் இரு கால்களையும் தூக்கி நிற்க முயன்றவரானார்
அறிஞர்களிடையே நடந்த தர்க்கம் ஆய்வைத் தந்தது
எனக்குள் நடந்த தர்க்கம் தேடலைத் தந்தது
-----------------------------------------------------
குரைஷ் குல இணை வைப்பாளர்கள் நபி ஸல் அவர்களிடம் விதியைப் பற்றி தர்க்கம் செய்ய வந்தனர். உடனே அவர்கள் நரகில் முகம் குப்புறத் தள்ளப்படும் போது நரகின் வேதனையை சுவைத்துப் பாருங்கள்! (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் (அதற்கான) முன் திட்டப்படியே நாம் படைத்திருக்கிறோம் (அல்குர்ஆன் 54:48,49) என்ற வசனம் இறங்கியது.

(குறிப்பு: இந்த ஹதீஸ் இப்னுமாஜா 83, முஸ்லிம் 2656 ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)

No comments:

Post a Comment