Thursday 1 May 2014

உழைத்து ஓய்ந்தவனுக்கு ஓயாத தொல்லை


உழைத்து, உழைத்து தேய்ந்த ஓடாய் போனேன்
தேய்ந்த ஓடை உதவாத ஓடென்று தூக்கி எறிந்தனர்


தூக்கி எறிந்து விழுந்தது தெரு வீதியில்
தெரு வீதியில் விழுந்ததால்
வழியே வந்தவர் பாதத்தை கிழிக்க நேர்ந்தது
பாதத்தை கிழித்ததால்
பாதிக்கப் பட்டவர் கோபமாக எறிந்தவனை விடுத்து
'சனியனே' என எனைத் திட்டிச் சென்றார்

உழைத்து ஓய்ந்தவனுக்கு ஓயாத தொல்லையும்,திட்டுதலும்
உழைக்காது ஊரை உலை போட்டு திரிபவனுக்கு பாராட்டும் ,பண முடிப்பும்

No comments:

Post a Comment