Friday 13 June 2014

வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன்!

நெடு காலம் வாழ வேண்டும்
நெடுங் காலம் நல்வாழ்வு வாழ வேண்டும்

நின் அருள் பெற வேண்டும்
நின் அருளைக் கொண்டு மற்றவருக்கு உதவ வேண்டும்

உழைத்து தேட வேண்டும்
தேடியதை பகிர்ந்து அளிக்க வேண்டும்

வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன்
இறைஞ்சுவதை உன்னிடமே இறைஞ்சுவேன்

வேண்டுவது எனக்காக மட்டுமல்ல
வேண்டுவது அனைவருக்காகவும்

கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உன் வசமே
கொடுப்பதை எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பாய்
கொடுக்காமல் இருப்பதும் நன்மையைக் கருதியே இருக்கும்

கேட்க வேண்டியதும் என் கடமை
கேட்க நாடுவதை செயல்படுத்த வேண்டியதும் என் கடமை

அழவைப்பவனும் நீயே
ஆனந்தத்தில் சிரிக்க வைப்பவனும் நீயே
அழுகையையும் ,சிரிப்பதையும்
மனம் மகிழ்வாய் ஏற்றுக் கொள்ளும்
திடமான உள்ளத்தை தந்து விடு

No comments:

Post a Comment