Wednesday 16 July 2014

எதைச் சொல்வது ?

எதைச் சொல்வது ?
துயரத்தையா!
மகிழ்வையா !
தியாகத்தையா!

அனைத்தையும் மறைத்து விடு
அனைத்தையும் மறந்து விடு
அனைத்தும் தொடரும்
அடுத்த நிமிடமே தொடரும்
வ்ரும்பினாலும்
விரும்பாமல் ஒதுங்கினாலும்
விட மாட்டார்கள்
தொடர்வார்கள்
தொல்லைகளும் தருவார்கள்
தொல்லைகள் தந்தமைக்கு
வருத்தமும் தெரிவிப்பார்கள்
அடுத்த நாளே
அதனை தொடர்வார்கள்
அத்தனை விதமாக மக்கள்
நம்மை சூழ வாழ்கின்றோம்

எதையும் தாங்க மனம் வேண்டும்
எப்பொழுதும் நம் உயிர் பிரிக்கப் படும்
இந்த நொடி
நம் நொடி
நம் நாடியை வலுப்படுத்தி
நம் நன்மையான
செயலை செய்து
நன்மையை தூவி விடுவோம்

மனித நேயம் வேண்டும்
நல்லதை போற்றி வளர்க்க வேண்டும்
கெட்டதை கண்டும் காணாமல் போகும் நிலை மாற வேண்டும்

சமூக வலைதளங்களின் சக்தியை நாம் அறிவோம்
நம்மில் முடங்கிக் கிடக்கிக் கிடக்கும் சக்தியை நாம் அறிய வேண்டும்
சமூக வலைதளங்களுக்கு நம் வருகை பொழுதை போக்க அல்ல
நம்மால் முடிந்த சேவைகள் செய்திட வேண்டும்

No comments:

Post a Comment