Friday 4 July 2014

பாசங்கள் இருப்பதால் கண்கள் குளமாகின்றன

அதி காலை நேரத்தில் கண்கள் குளமாயின

ஒருவர்
"உன்னைக் காணக் காத்திருக்கிறேன்
கண்மணியே..."

மற்றொருவர்
"எங்கள் வாப்பும்மா...
மனசெல்லாம் வந்தாயே ...
அன்பை நிதம் தந் தாயே..."

பாசமானவர்கள் பிரிந்த நிலையை
பாசத்தை தந்தவர்கள் பிரிந்த நிலையை
பாசமாக நெஞ்சமெல்லாம் நினைவில் நிறுத்தி
நேசமாக நினைவு கொள்கின்றார்கள்

பிரிவு இல்லாத இடமுண்டோ
பாசம் பகிராத இடமுண்டோ
எங்கள் இடத்திலும் உண்டு
உங்கள் இடத்திலும் உண்டு
நம் அனைவரிடத்திலும் உண்டு

பாசங்களும்
பிரிவுகளும்
நிறைந்த நமக்குள்
ஏன் இத்தனை
பிரிவுகளும் விரோதங்களும்
பாசம்தானே தொடரச் செய்கின்றது

மோசமானவர்கள் மனதில் ஏன் பாசமற்ற கொடூர எண்ணங்கள்

ஒன்று போக ஒன்று வரும்
குழிப் பிள்ளை மடியில் வருவதும் தொடர் நிகழ்வு

இருப்பதும் போவதும் உயர்வாய் இருக்க
வருவதும் இருப்பதும் உயர்வாய் இருந்துவிடும்

மனம் நேசம் கொள்ளத்தான்
மனம் பாசம் தரத்தான்
படைத்தவனே பாசத்தோடு தான் படைத்தான்
படைத்தவனே பாசத்தோடு தான் தன் வசம் அழைத்துக் கொள்கின்றான்

நாமும் வாழும் வரை
பாசமுடன் ,நேசமுடன் ,
மனித நேயத்தோடு வாழ்ந்திடுவோம்
வாழ்வின் பொருளை உணர்ந்து
#பாசமுடன்
 

No comments:

Post a Comment