Monday 7 July 2014

குறையும் நிறையும்

குறையை மட்டும் காண்பது
நிறைவைத் தராது
நகர விடாது

நிறைவை மட்டும் காண்பது
குறையை அறியாமல்
தடுமாற வைக்கும்

உண்மையை அறிவது
நன்மையை நாடி நகரும்

குறை மனது உடையோர்
மன திருப்தி அடைவதில்லை


நிறை மனது உடையோர்
எதிலும் நிம்மதி அடைவார்

தாகம் வர
அரைப் பகுதி குவளை நீர் கிடைத்தாலும் மகிழ்வர்
அரைப் பகுதிதானே குவளை நீர் கிடைத்தது என
குறை சொல்பவர் குறை மனம் உடையவர்

No comments:

Post a Comment