Wednesday 17 September 2014

சொல்ல வேண்டியதைச் சொல்



சொல்ல வேண்டியதைச் சொல்
சொல்லக் கூடாததை சொல்லாதே
சொல்ல வேண்டியதை
சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்
சொல்லக் கூடாததை
சொல்ல கூடாத தருணத்தில் சொல்லி விடாதே

செய்ய வேண்டியதைச் செய்
செய்யக் கூடாததை செய்யாதே
பதுமையாக படைக்கப் படவில்லை
வாய் உண்பதற்கு மட்டுமல்ல
வாய் பேசுவதற்கும் தான் தரப்பட்டுள்ளது
வாய் பேச
உதடுகள் அசைய
நாக்கு பிரள
இத்தனையும் ஒன்று சேர
அறிவும் அங்கு பயன் படுத்தப் பட வேண்டும்
இறைவன் நம்மை படைத்ததற்கே காரணம் உண்டு
காரணத்தை கண்டு அறிந்து
ஒவ்வொன்றும்
உபயோகப் பட வேண்டும்
அறிவைத் தேடு
ஆய்வை நாடு
அதன் சிறப்பை
மற்றவருக்கும் கொடு
இறைவனின் ஆற்றலை அறிந்திடு
இறைவனுக்கு நன்றி செலுத்து
இறைவனைத் தொழுது
சிறப்பை இரு லோகத்திலும்
பெற்றிட வாழ்வை உயர்வாக்கிக் கொள்
Mohamed Ali

No comments:

Post a Comment