Saturday 11 July 2015

அன்னை பாத்திமா அவர்கள் சிந்திய கண்ணீர்

நபிகள் நாயகத்தின் பேரர்கள் ஹசன் ,ஹுசன் இருவர்களும் தங்களது சிறு வயதில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதனை கண்ணுற்ற தாய் பாத்திமா மனம் கலங்கி அழுதார்கள்
தங்கள் தாய் அழுவதை கண்ட பிள்ளைகள் தங்கள் சண்டையை நிறுத்தி
தாயிடம் பாசமாக 'ஏனம்மா !அழுகிறீர்கள் ' என்று வருத்தமாக கேட்டார்கள்
'குழந்தைகளை உனக்கு சரியாக வளர்க்கத் தெரியவில்லையே'
என்று அல்லாஹ் கேட்டால் நான் என்ன சொல்வேன்'
என நினைத்து மனம் வருந்துகின்றது என்றார்கள்
அன்னை பாத்திமா அவர்கள் சொன்ன பதில் ஹசன் ,ஹுசன் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது
இனி தங்களுக்குள் சண்டை போடமாட்டோம் என்று அன்னைக்கு ஆறுதல் மொழி சொன்னார்கள்

இஸ்லாத்தில் குழந்தையை சிறப்பாக வளர்ப்பது தாய்க்கு முக்கியமாக கருதப் படுகின்றது

No comments:

Post a Comment