Monday 5 December 2016

உமது புகழ் காலமெல்லாம் தொடரும்

பட  source
உமது புகழ் காலமெல்லாம் தொடரும்
முதல்வரின்  ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
செய்த சேவைகள் ,மக்கள் தரும் வாழ்த்துகள் உமது நன்மைகளாக உம்மை
உமது இறப்புக்கும் பின்னும் தொடரும் .
அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது
இந்தியாவில் மறக்க முடியாத
வரலாறு படைத்த பெண்களில் நீங்கள் இருப்பீர்கள்
நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது

Saturday 3 December 2016

ஊடுருவும் பார்வை

ஊடுருவும் பார்வை
சுவை பார்க்கும் நாக்கு
சிந்திக்கும் மூளை
செயல்படும் கை
தொடர்ந்து ஓடும் குருதி
துடிக்கும் இதயம்
இடம் விட்டு நகர உதவும் கால்கள்
கேட்டு அறியும் செவிகள்
இன்னபிற அங்கங்கள் பெற்றாய்
இவைகளைக் கொண்டு வாரிசுகளையும் உருவாக்கினாய்
இவைகளை உமக்களித்த இறைவனுக்கு நன்றி செய்து அவனைத் தொழுதாயா !
அங்கங்கள் செயல்பட உலகில் உலாவருகின்றாய்
அங்கங்கள் செயல்படும் திறனை இழக்க இருந்த இடத்தில் மூலையில் முடங்குகின்றாய்

Monday 15 August 2016

நிம்மதியான தூக்கம்

ஆய்வின்படி விடிகாலை (பஜர் தொழுகை) நேரம் உடலுக்கு ஆரோக்யமானது
இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை
தூக்கம் நமக்கு கிடைத்த இறைவனது அருட்கொடையில் மிக முக்கியமானது .
குழந்தையின் தூக்கம் கெடுத்து விட்டால்,தாய் சினம் கொள்வாள்.காரணம் பிறந்த குழந்தைக்கு அதிக நேர தூக்கம் தேவைப்படுகின்றது
தூக்கம் நமது இழந்த சக்தியினை மீட்டு அடுத்த நாள் உழைக்க பலுவினை தருகின்றது .
சிலருக்கு தூக்கம் குறைவாக இருக்கலாம் அதனால் அவர் அதற்காக அதே சிந்தனையில் இருக்கக்கூடாது .அந்த எண்ணம்தான் அவர் உடல்நிலையினை மிகவும் பாதிக்கும்.. தூக்கம் இல்லாமல் எந்த மனிதனும் வாழ முடியாது . நிம்மதியான தூக்கம் இல்லை என்றாலும் அவரை அறியாமல் பூனைத் தூக்கம் அவருக்கு கிடைத்திருக்கும் .

தூக்கமற்ற நிலை தொடர் கதையானது


தூக்கம் வரவில்லை என்பதால் துயரம்
துயரம் வந்ததால் தூக்கம் வரவில்லை
துயரத்தைப் போக்க வயிறு நிறைய உணவு
நிறைய உண்டதால் அயர்வு
அயர்வு வந்ததால் சோர்வு
சோர்வைப் போக்க தேனீர்
சோர்வு போனதால் கணினியில் நோட்டம்
கணினியில் முகநூலில் பார்வை
முகநூலைப் பார்க்க இரவு பகலானது
பகலில் பரபரப்புடன் அலுவலகம் நோக்கி ஓட்டம்
அலுவலகத்தில் அயர்வு அடைய
இரவில் தூங்காமல் இருந்ததால்
அலுவலகத்தில் பூனைத் தூக்கம்
தூக்கத்துடன் வேலை பார்த்ததால் தவறுகள்
தவறுகள் மேலாளரிடம் திட்டலை வாங்கித் தந்தது
மேலாளரிடம் திட்டல் பெற்றதால் தூக்கம் தொலைந்தது
மேலாளர் திட்டியதால் வீட்டில் கோபம்
வீட்டில் கோபம் வந்ததால் இரவில்
தூக்கமற்ற நிலை தொடர் கதையானது

தூக்கம் இல்லையென்பது வியாதியல்ல
தூக்கம் இல்லையென்று கவலையடைவதே வியாதியானது

Monday 1 August 2016

கேள்விக்கு என்ன பதில்!

மூன்று வயது குழந்தை கேட்ட கேள்வி மகிழ்வாய் இருந்தது ஆனால் அதற்கு பதில் சொல்ல தெரியாமல் இருந்தது மனதிற்கு வருத்தமாக இருந்தது.
கேள்வி கேட்க குழந்தைகளுக்கு சரியான அதன் அறிவுக்கு ஏற்றதுபோல் பதில் சொல்வது குழந்தைகளின் அறிவை வளர்க்கும்.
  குழ்ந்தை அதிகமாக கேள்வி கேட்பது அதன் தாய் அல்லது அதன் தந்தையிடமாகவே இருக்கும்.அதற்கு பாடம் சொல்லிக் கொடுக்க நாம் முயல்கின்றோம். ஆனால் அது கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியவில்லையென்றால் பேச்சினை மாற்ற முயல்கின்றோம் . பாச்சி, பாச்சி (பால்) என்று பசியுடன் பால் கேட்கும் குழந்தையை தாய்ப் பால் இல்லாத தாய் தன் பால் கொடுக்கும் காம்பினை பூச்சி பூச்சி என்று சொல்லி குழந்தைக்கு பயத்தினை உண்டாக்குவதனைப்  படித்திருக்கிறோம். சரியான பதில் சொல்லத்தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மறைமுகமாவது அதன் அறிவுக்கு ஏற்றது போல் சொல்லக் கூடிய அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.

Tuesday 26 July 2016

குடும்ப கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு ..


குடும்ப  கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு .அதில் சில. .
கருத்து முரண்பாடு ஏற்படுவது.
உருவாகும் பிரச்சினைகளைப் பொருட்படுத்துவது.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்
வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.இல்லாத மனைவி .

குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரிக்காமலும் அன்புடனும் இல்லாமல் இருப்பது .
கூட்டு  குடும்பத்தில் குழந்தைகள் போடும் சண்டையில் இவர்கள் தலையிட்டு பிரச்சனையிணை அதிகமாக்கி அதனால் ஏற்படும்  விளைவு .
பணப் பிரச்சினைகளைப் பொருட்படுத்தும்  மனைவி
பொருள் வேண்டியும் மற்ற பிற காரணங்கலுக்காகவும் பொய் பேசியே வாழ்கையினை  ஓட்ட நினைப்பது

Wednesday 6 July 2016

பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!

முஸ்லிம் குடும்பத் தலைவிக்கு பெருநாள் வந்தால் வேலைதான் அதிகம்!
பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!
பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான்.
ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை
மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .
பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
ஆண்கள் தொழுதுவந்த பின் வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.
பெண்களுக்கு பொதுவாக நாள் முழுவதும் வேலைதான்
பெருநாள் அன்று சமையலறையை விட்டு வெளியே செல்ல எந்த நேரமும் முடியாது .இந்த நிலையில் அவர்கள் எப்படி பெருநாளை கொண்டாட முடியும்

Friday 17 June 2016

இறைவா துன்பம் வரும்போது துயர் கொள்ளாத உள்ளத்தை தா !.



  என் முடி இப்போது வெள்ளையாகி  விட்டது , இளமையில் இருந்த  மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும்   பக்குவம் எப்போழுதுதான் வரும்?

பெண்கள் அழுவதின் பொதுவான காரணங்கள் ...!

பெண்கள் ஏன் அழுகின்றனர்
கவலை கவ்வியதாலும் அல்லது நினைத்த காரியம் சாதிக்க வேண்டியும் இருக்கலாம்
உண்மையிலேயே அழுகின்றார்களா அல்லது அழுவதுபோல் பாவனை செய்கின்றார்களா!
அழுதால் தன மீது பரிதாபப் பட்டு தன மீது கணவனுக்கு இறக்கம் வர தன்னை அமைதிப்படுத்த வருவதனை விரும்புகின்றார்களா!
தன பிறந்த இடத்தினை அதிகமாக நேசிக்க புகுந்த இடம் பிடிக்காததினால் அழுகின்றார்களா!
தன்மீது யாரும் கருணைக் காட்டவில்லையே என்ற ஆதங்கம் அவர்களை அழும் நிலைக்கு தள்ளி விட்டதா
அனைத்து வேலையும் தானே செய்யும் நிலை இருந்தும் ஒருவரும் பாசம் காட்டாமல் நிந்திக்கின்றார்களே என்ற நினைப்பு அவர்களை அழச் செய்துவிட்டதா

முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர்

உலக முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர் / Muslim scientists of the world 

இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
முஸ்லிம்கள் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்புகளை உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தந்துள்ளார்கள் .அவர்கள் விஞ்ஞானத்திலும் சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அந்த விஞ்ஞானிகள் மார்க்க பற்றிலும் தங்களை உட்படுத்திக் கொண்டு சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அவர்களது உடுத்தும் உடைகள் மற்றும் வாழ்வின் நெறி முறைகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையிலேயே இருக்கும்.
----------------------------------

Tuesday 14 June 2016

முன்னாள் குத்துச் சண்டை வீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்

முன்னாள் குத்துச் சண்டை வீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்
வீரர் மகம்மது அலி அவர்களின் மகள்கள் (hana (ஹன) மற்றும் லைலா) வீட்டிற்கு வந்தபோது அவர்கள் முறையான ஆடைகள் அணியாமல் மிதமான ஆடைகளை அணிந்து வந்தனர். அந்த நிகழ்வினை அவரது மகள் விவரித்தது நம் மனதில் காலமும் நினைவில் நிற்கக் கூடியது.
கார் ஓட்டுனர் வீரர் மகம்மது அலி சூட் (அறை) வரை வந்து அவர்களை விட்டுச் சென்றார் .எப்போழுதும்போல் மகம்மது அலி கதவுக்குப்பின் நின்று தன மகள்களை வேடிக்கையாக பயமுறுத்தினார் , பின்பு அன்பாக அவர்களை தன மடியில் அமரவைத்து அன்போடு முத்தங்களைக் கொடுத்தார்.அப்பொழுது அவர் சொன்ன அறிவுரைகளும் ஆலோசனைகளும் தன்னால் மறக்க முடியாது என்று அவரது மகள் சொல்கின்றார்

Monday 13 June 2016

நின் அருள் பெற வேண்டும்

நெடு காலம் வாழ வேண்டும் 
நின் அருள் பெற வேண்டும் 
நின் அருளைக் கொண்டு மற்றவருக்கு உதவ வேண்டும்
உழைத்து தேட வேண்டும் 
தேடியதை பகிர்ந்து அளிக்க வேண்டும்
வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன் 
இறைஞ்சுவதை உன்னிடமே இறைஞ்சுவேன்
வேண்டுவது எனக்காக மட்டுமல்ல 
வேண்டுவது அனைவருக்காகவும்

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்
வேண்டுதல் வேண்டப்படுபவர்காளாய் நாங்கள் இருக்கிறோம்
பெறுதல் பெறப்படாதவனாய் நீ இருக்கிறாய்
பெறுதல் பெறப்பட்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்
பிறப்பும் இறப்பும் உனக்கில்லை
பிறப்பும் இறப்பும் உன்னால் நாங்கள் பெற்றோம்
வியாதியும் தந்தாய்
வியாதி தீர மருந்தும் கற்றுக் கொள்ளச் செய்தாய்

கடிய சொல் சொல்வதில்லை

கடிய சொல் சொல்வதில்லை
கருணை சொல் சொல்வார்
முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்
துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி

விவேகமில்லா வீரம் விரயமாகும்

விவேகமில்லா வீரம் விரயமாகும்
பணிவில்லா பாசம் குறையாகும்
அறிவில்லா ஆற்றல் நாசமாகும்
நமக்கோர் பக்குவம் வந்திட
எல்லோரும் ஒட்றுமை அடைந்திட
எடுத்தோம் தொடுத்தோம் என்றில்லாமல்
நல்லதோர் திட்டம் தீட்ட
செம்மையாய் செய்து முடிக்க
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய் மனதில் நிறுத்திட
இறை வணக்கம் இயல்பாய் இருந்திட
இறைக் கருணையும் இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்

Monday 9 May 2016

போட்டியோ போட்டி !

போட்டி போட்டு முன்னேறு
போட்டி போடவேண்டியதில் போட்டி போடு
போட்டிக்காக போட்டி வேண்டாம்
போட்டி போடுவதில் குறிக்கோள் வேண்டும்
போட்டி போடுவது திறமையை வளர்த்துக் கொள்ள
போட்டி போட்டு பரிசுகளை அள்ளிக் கொள்ள
போட்டி போடுவது பெருமையை நாடி அல்ல
போட்டியில் வெற்றி கொண்டால் கர்வம் கொள்ளாதே
போட்டி போடுவது மற்றவரை வீழ்த்த அல்ல
போட்டி போடுவது நாம் வெற்றி அடைய
போட்டியின் வெற்றி நிலையானதல்ல

Saturday 16 April 2016

சதாம் ...

சதான் ஹுசைனைப் பற்றி அவரது அறிய உயர்வான வாழ்க்கை வரலாறினை அறிந்துகொள்ளாமல் சம்பந்தமில்லாமல் தேர்தலில் பேசுபவர்...
முன்னிரவு பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல வந்து சேர்ந்துவிட்டது
நுணலும் (நுணல் = தவளை)தன் வாயால் கெடும் என்பது பழமொழி
இது கத்தி கத்தி தன் இருப்பிடத்தை பாம்புக்கு தெரியப் படுத்திவிடும் பாம்புகள் அவற்றை விழுங்கி விடும்.
தன் வாயால் கெட்ட வரிசையில் இந்த புதிய காளான்
தானும் மறைய தன்னோடு சேர்ந்தவர்களையும் மறைய வைக்க முயல்கின்றது
--------------------------------------------------------------------------------

Friday 15 April 2016

பொய்யும் மெய்யும் கலந்து வரும் தேர்தல் களம்

பொய்யும் மெய்யும் கலந்து வரும் தேர்தல் களம்
மெய்யை சொல்ல வைத்து ஊர் அறிந்து சிரிக்க வைக்குது வேட்பாளர் நிலை
நீரில் அமுத்தி வைத்த காற்றடைத்த பலூன் நீரின் மேலே வரத்தான் செய்யும்
வேட்பாளர் வழக்குகள் தேங்கி நிற்கும் நிலை
வேட்பாளர் வாக்காளருக்கு தேர்தலில் நிறைவேற்ற முடியாத தடையற்ற வாக்குகள் தரும் நிலை
உண்மையும் பொய்யும் அறிந்து தனக்கு விரும்பாதவருக்கும் கட்டுப்பாட்டில் வாக்குகள் போடும் நிலை

Saturday 2 April 2016

பள்ளிவாசலில் தொழுது வருவது சாலவும் நன்று.


தொழுவதின் சிறப்பு.

According to a latest research, walking is a useful sport to prevent some knees diseases …
நடப்பது மூட்டு வலி வராமல் இருக்க உதவலாம்..
குதிப்பதும், ஓடுவதும் நடப்பதும் எவராலும் தொடர்ந்து செயல் பட முடியாது  .
உடல் நலம் கருதி இதனை செயல்படுத்த முயல்வோரும் சில காலங்களுக்குள் நிறுத்தி விடுவர்..
ஆனால் அதனை இறைபக்தியுடன் செயல்படுவோர் ஒரு காலமும் நிறுத்த மாட்டார்கள் .
இதற்கு ஒரே வழி தொழுகை. இஸ்லாமிய முறை தொழுகை இறைபக்தியுடன் உடல் நலமும் தர வல்லது.தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு கழுத்தில் உள்ள எலும்பின் தேய்மானம்(Cervical Spondylosis ) வருவதில்லை.

Thursday 31 March 2016

உன் பார்வையில் நான் தெரிவதில்லை

உன் பார்வையில் நான் தெரிவதில்லை
என் பார்வையில் நீ தெரிகின்றாய்

நீ போகும் வழியில் நானும் தொடர்கின்றேன்
நான் போகும் வழியும் நீயும் பார்க்கின்றாய்

வால் வீச்சில் விழாத நான்
வார்த்தை வீச்சில் விழுந்து போனேன்

விழுந்த நான் விழுந்தபடியே கிடக்க
வேறு வழி நோக்கி கவனத்தை திருப்புகின்றாய்

மயங்கியதின் காரணம் கேட்கவில்லை
மயக்கத்தைப் போக்க நற்செயல்கள் செய்யவில்லை

Monday 28 March 2016

கிடைத்ததை கொடுப்பார் இன்னும் கொடுப்பதில் நாட்டமும் செயலும் கொண்டவர்

அப்பெண் ஒரு புகழ் பெற்ற செல்வந்த தம்பதிகளின் ஒரே பெண் வாரிசு .
அப்பெண் ஒரு இளவரசி போல் இறைபக்தியோடு வளர்க்கப் பட்டவர் .
அப்பெண் ஞானம் பெற்ற பெண்
அமமூதாட்டி தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கண்ணியமாக. மென்மையாக பேசுபதையே தன இயல்பாகக் கொண்டவர்
அமமூதாட்டி இரவு நேரங்களிலும் ஓதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்
அவர் தஹஜ்ஜத்( பின்னிரவுத் தொழுகை)தொழுகையும் விட்டதில்லை
(இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக-குர்ஆன்:17:79.)

Thursday 17 March 2016

கவலைப்படாதே !


வருத்தம் ஏன் ! மனம் மகிழ்வுடன் வாழ்ந்து விடு .

நாம் நம்மைப் பற்றிய எண்ணுவது  ஒருபுறம் இருக்கட்டும்; மற்றவர்களைப் பற்றி சிறிது  யோசித்துப் பார்போம் !

மிதியடி இல்லையே என்று எண்ணாமல் கால் இல்லாமல் இருப்பவர்களைக் கண்டு ஆறுதல் அடை. பொருள் வாங்க பணம் இல்லையே என்று வருந்தாமல் நமக்கு கடன் இல்லை என நிம்மதி கொள்.
வீட்டில் இறப்பு ஏற்பட்டால் கண் கலங்காதே! எத்தனையோ குடும்பங்கள் அடியோடு எதிர்பாராத வகையால் இயற்கையின் சீற்றத்தால் அழிந்துவிடுவதனை பார்க்கின்றோம்.
குழந்தைகள் படிக்க வைக்க  பணம் இல்லையே என்று வருத்தம் அடைவோர்    குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்பார்த்து அமைதி அடைந்து நாம் பாக்கியம் பெற்றோர் என கருதட்டும்.தேவை மனவுறுதியும், ஆரொக்கியமும், தியாக மனப்பான்மையும், குழந்தைகளை இறைவன் அளிக்கும் மிகப்பெரும் செல்வம் என்று கருதும் மன நிலையும் தான். பணங்காசுகளோ, வசதிவாய்ப்புகளோ அல்ல.

Monday 7 March 2016

பெண்கள் ஏன் ஆண்கள் முன்னால் செல்லாமல் பின்னால் அல்லது பக்கத்தில் நடக்கிறார்கள் !

ஆண்கள் இயற்கையாக பெண்களை விட வேகமாக நடக்கும் சக்தி பெற்றவர்கள். அதில் சில பெண்கள் விதி விலக்கும் உண்டு.
பெண்கள் மரியாதை காரணமாக ஆண்கள் பின்னால் நடந்து செல்வதும் பண்பாடாக கருதுகிறார்கள். அது தாழ்வு மனப்பான்மையால் வந்ததாக கருதுவது தவறு.
ஆண்கள் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் இருக்க வேண்டியதும் இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதனால் ஆண்களுக்கு அந்த பொறுப்பும் உள்ளது.
மனிதன் பெண்ணுக்கு பாதுகாப்பாக வழியமைத்து செல்வதற்கு சூழ்நிலையின் அவசியமான கட்டாய கால நிலை.
ஆண்களின் பார்வை அதிகமாக பெண்கள் மீது இருக்கும் இக்கால நிலையில் பெண்களின் நிலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
பெண்கள் வெளித் தோற்றத்தில் முக்கியம் கொடுத்து அவர்கள் உடுத்தும் ஆடைகள் பெண்களை கவர்ச்சிப் பொருளாக மாற்றி விட்டது .
அழகை கண்டு ரசிப்பது இயல்பான மனித குணம். ரசிக்கும் குணமாக இருந்து அதுவே சிலருக்கு பாதகமான எண்ணங்களை உருவாக்கி நோக்கத்தை தவறான பாதைக்கும் ஈர்த்துச் செல்கிறது மிகவும் வேதனையாக அமைந்து விடுகின்றது .

Tuesday 1 March 2016

சேர்க்க முயல்கிறேன்

சுயநலமிகளின் வேகம்
பிரிவுகளின் நோக்கம்

பொதுநலமிகளின் தாக்கம்
ஒற்றுமையின் ஏக்கம்

முறிக்க முயல்கிறாய்
சேர்க்க முயல்கிறேன்

அடங்கா ஆசை
பிளக்காத பாசம்

ஒரு விதை
ஒரு மரம்
பல கிளை
பல பழங்கள்
சுவையில் ஒன்றுதான்
சுவையில் ஒன்று கசக்க
மரத்தையே சாய்த்தால்
பழங்களே மாய்ந்துவிடும்

நாடுவது கிடைக்கும்.



ஒரு செயல் மற்றொரு செயலுக்கு வழிவகுக்கும்.
இதில் உண்மை இருப்பதும் உண்மை.

இதில் உண்மை உண்டு என்று சொல்வோர் பலர். 

'உண்மை கிடையாது' என்று  சொல்லுமளவுக்கு சிலர்

நம்பிக்கை வைப்பதில் பலருக்கு நகைப்பை கொடுத்தாலும்
அந்த சிலர் அதில் முழு நம்பிக்கையோடு நம்புகின்றனர்.


இப்படி பல உண்மைகள் .

நாடுவது கிடைக்கும்.

பகுத்துணர்ந்து செயல்படுதல் நன்மை தரும் .

கற்றவருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு .

நீருக்கு நிறமில்லை இதுவும் உண்மை .

Tuesday 26 January 2016

தற்கொலையை தற்கொலை செய்

புரட்சியும் ,மறுமலர்ச்சியும் தற்கொலை செய்து கொண்டுதான் வந்ததாக சரித்திரம் இல்லை.
போராடும் குணம் வேண்டும் அதற்காக வாழ வேண்டும்.
நற்காரியங்களுக்காக் போராடும்போது உயிர்போகும் நிலை உருவாக்கப்படலாம் ஆனால் அது தற்கொலையாக இருக்கக் கூடாது.
ஹிட்லரும் தற்கொலை செய்துக் கொண்டான் தன்னிலை தடுமாறிய போது.
சதாம்உசேன் போராடும் குணம் கொண்டான் ஆனால் அவன் தற்கொலை செய்துக் கொள்ளவில்லை போர் வெறியர்களால் கொலை செய்யப் பட்டான்.
பெரியோர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள் தற்கொலை செய்யும் கொள்ளும் நோக்கம் அவர்களுக்கு இல்லை.

Friday 1 January 2016

நிகழ்பவையெல்லாம் நன்மையாக அமைய இறைவனை வேண்டுவோம்

நடந்த காலங்களுக்கு நன்றி
நிகழ்பவையெல்லாம் நன்மையாக அமைய இறைவனை வேண்டுவோம்
ஓர் ஆண்டின் தொடர்ச்சியை கொண்டாடி மகிழ்ந்து வரவேற்பது வழக்கம்
நான் (நேற்று வியாழன் 2015)ஆண்டின் முடிவை பேரன் ஜாகிர்  Mohamed Shakir கடையில் பகல் விருந்து உண்டு மகிழ்ந்தேன்
இறைவனுக்கே அனைத்துப் புகழும்
உணவகம் இருக்கும் இடம்
சென்னையில் O M R வீதியில்
கிழக்கு நோக்கி உள்ளது
சென்னை போகும்போது முதல் டோல் கேட் முன் இடது பக்கம்
சென்னையிலிருந்து வரும் போது கடைசி டோல் கேட் வலது பக்கம்
தாங்கள் சிறப்பான .ஆரோக்கியமான உணவு மகிழ்வாக சாப்பிட அங்கு செல்லலாம்
படத்தில் போன் நம்பர் உள்ளது .
ஆர்டர் செய்தும் இருக்குமிடத்திற்கு வரவைக்கலாம்
தாங்கள் அவசியம் சென்று உணவு உண்டு மகிழுங்கள்
இரண்டாம் படம்
நான் மற்றும் பேரன் ஜாகிர்  Mohamed Shakir (ஜாகிர் பல ஆண்டுகள் லண்டனில் உணவகம் நடத்திய அனுபவம் உண்டு .அவர் கேட்ரரிங் catering படித்தவர்
மூன்றாம் படம் பேரன் சமீர் .பேரன் ஜாகிர் மற்றும் Mohamed Ali

ஐந்தாவது படத்தில் பேரன் யாசர் உள்ளார்
--------------------------------


London Grill N Shake

4/76 Rajiv Gandhi Salai,
OMR, Egattur
Near Navalur Sipcot Tollgate
Chennai - 603103
CONTACT INFO
TEL: +91 - (0)44 27435944
MOB: +91 - 9176385944
EMAIL: londongrillnshake@hotmail.com
http://www.londongrillnshake.com/index.html
---------------------------------------------------------------