Monday 13 June 2016

கடிய சொல் சொல்வதில்லை

கடிய சொல் சொல்வதில்லை
கருணை சொல் சொல்வார்
முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்
துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி

காய்வழி வந்து கனியாகி சிறப்படைய
சேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற
அறவழி அறிந்து பிறவழி நாடுவார்
மறைவழி அறிந்து நபி வழி பேணுவதன்றோ சிறப்பு
கடுஞ்சொல் சொல்வோர் நல்வழி வர நாளாகுமோ !
பெருஞ்செயல் செய்வோர் அறவழி வழி செய்யச் செய்வது சிறப்பாகுமே
அயலானை அரவணைத்து செயல்பட்டால்
கயவோனும் மறையறிந்து தூய்மையடைவான்

No comments:

Post a Comment