Monday 13 June 2016

நின் அருள் பெற வேண்டும்

நெடு காலம் வாழ வேண்டும் 
நின் அருள் பெற வேண்டும் 
நின் அருளைக் கொண்டு மற்றவருக்கு உதவ வேண்டும்
உழைத்து தேட வேண்டும் 
தேடியதை பகிர்ந்து அளிக்க வேண்டும்
வேண்டியதை வேண்டி இறைஞ்சுகின்றேன் 
இறைஞ்சுவதை உன்னிடமே இறைஞ்சுவேன்
வேண்டுவது எனக்காக மட்டுமல்ல 
வேண்டுவது அனைவருக்காகவும்

கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் உன் வசமே 
கொடுப்பதை எப்பொழுது வேண்டுமானாலும் கொடுப்பாய் 
கொடுக்காமல் இருப்பதும் நன்மையைக் கருதியே இருக்கும்
கேட்க வேண்டியதும் என் கடமை 
கேட்க நாடுவதை செயல்படுத்த வேண்டியதும் என் கடமை
அழவைப்பவனும் நீயே 
ஆனந்தத்தில் சிரிக்க வைப்பவனும் நீயே 
அழுகையையும் ,சிரிப்பதையும் 
மனம் மகிழ்வாய் ஏற்றுக் கொள்ளும் 
திடமான உள்ளத்தை தந்து விடு

No comments:

Post a Comment