Monday 13 June 2016

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்

வேண்டுதல் வேண்டாமையிலானாய் நீ இருக்கிறாய்
வேண்டுதல் வேண்டப்படுபவர்காளாய் நாங்கள் இருக்கிறோம்
பெறுதல் பெறப்படாதவனாய் நீ இருக்கிறாய்
பெறுதல் பெறப்பட்டவர்களாய் நாங்கள் இருக்கிறோம்
பிறப்பும் இறப்பும் உனக்கில்லை
பிறப்பும் இறப்பும் உன்னால் நாங்கள் பெற்றோம்
வியாதியும் தந்தாய்
வியாதி தீர மருந்தும் கற்றுக் கொள்ளச் செய்தாய்

வியாதியை எங்கள் செயலாலும் உருவாக்கிக் கொண்டோம்
மரணம் உனக்கில்லை
மரணத்தை எதிர்பாராத விபத்தினால் வரும் நிலையை எங்களுக்கு தந்துவிடாதே
மரணம் எந்நிலையில் எங்களுக்கு வந்தாலும்
மரணத்திற்கு முன் எங்கள் நாவு உன் உயர்வை(கலிமாவை ) சொல்லிட வேண்டும்
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய் மனதில் நிறுத்திட
இறை வணக்கம் இயல்பாய் இருந்திட
இறைக் கருணையும் இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்

No comments:

Post a Comment