Tuesday 26 July 2016

குடும்ப கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு ..


குடும்ப  கலாட்டாவுக்கு பல காரணங்கள் உண்டு .அதில் சில. .
கருத்து முரண்பாடு ஏற்படுவது.
உருவாகும் பிரச்சினைகளைப் பொருட்படுத்துவது.
குழந்தைப் பெறும் பாக்கியம் இல்லாத தம்பதியர்கள்
வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.இல்லாத மனைவி .

குடும்பத்தில் அனைவரிடமும் அனுசரிக்காமலும் அன்புடனும் இல்லாமல் இருப்பது .
கூட்டு  குடும்பத்தில் குழந்தைகள் போடும் சண்டையில் இவர்கள் தலையிட்டு பிரச்சனையிணை அதிகமாக்கி அதனால் ஏற்படும்  விளைவு .
பணப் பிரச்சினைகளைப் பொருட்படுத்தும்  மனைவி
பொருள் வேண்டியும் மற்ற பிற காரணங்கலுக்காகவும் பொய் பேசியே வாழ்கையினை  ஓட்ட நினைப்பது

Wednesday 6 July 2016

பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!

முஸ்லிம் குடும்பத் தலைவிக்கு பெருநாள் வந்தால் வேலைதான் அதிகம்!
பெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு கவணிக்கப்பட வேண்டியதொன்று!
பெருநாள் வருவது முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்வாகவே இருக்கும். காரணம் முஸ்லிம்கள் கொண்டாடுவதே முக்கியமாக இரண்டே பெருநாட்கள்தான்.
ஒன்று ஈகைத் திருநாளாக இருக்கும் ரமதான் பண்டிகை
மற்றொன்று தியாத் திருநாளாக இருக்கும் ஈத் பெருநாள் .
பலநாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பெருநாளைக்கு பள்ளிவாசலுக்குச் சென்று மகிழ்வோடு இறைவனைத் தொழுது வருவார்கள் .அந்த வாய்ப்பு தமிழ் நாட்டில் குறைவு . மார்க்கம் அனுமதிக்கப் பட்ட ஒன்றை இவர்கள் கடைபிடிக்காமல் வீட்டிலேயே தொழுது கொள்கின்றார்கள் .அந்த மகிழ்வான ஒன்று கூடும் வாய்ப்பினை இழக்கின்றார்கள்.
ஆண்கள் தொழுதுவந்த பின் வேண்டிய நண்பர்களை விருந்துக்கு அழைகின்றார்கள்.
பெண்களுக்கு பொதுவாக நாள் முழுவதும் வேலைதான்
பெருநாள் அன்று சமையலறையை விட்டு வெளியே செல்ல எந்த நேரமும் முடியாது .இந்த நிலையில் அவர்கள் எப்படி பெருநாளை கொண்டாட முடியும்