Wednesday 25 January 2017

காட்சிப் பொருளாக மாறிய மனிதன்

அனைத்து பாதுகாப்பு வேலையும் மோசமானதாக இருக்கும். ஆனால் சில பாதுகாத்து வேலைகள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாக இருந்து வருகின்றன.அதிலும் இரவு நேர வேலைகள் மிகவும் அபாயகரமான வேலைகளாக உள்ளன.
மிகவும் பிரபலமான பக்கிங்காம் அரண்மனையின் சில காவலர், கடமை வீரர்கள் வேலை உலகின் மோசமான வேலைகளாக கூறப்படுகிறது. அவர்கள் எரிச்சலூட்டும்படியாக பல மணி நேரம் நின்று காவல் காப்பதுடன் காட்சிப் பொருளாக மாறிய பொம்மையாக மாறி காட்சி அளிக்க வேண்டும். அந்த காவலர்கள், சிரிக்க முடியாது, உணர்ச்சிகளை காண்பிக்க முடியாது, மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பதிலளிக்க முடியாது என்ற  பல விதிகள். தினமும் அவர்கள் சீருடை துவைத்து சலவை செய்ய வேண்டும். சிப்பாய் போன்ற கூடுதல் கடமை .கடமைகளில் தவறு நேர்ந்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள்.
நாகரீகம் வளர்ந்த நாட்டில்  விந்தை மனிதர்களாக, காட்சிப் பொருளாக மாறிய மனிதன். மற்றவருக்கு  மகிழ்வை தந்து தன்னை வருத்திக் கொள்ளும் மனிதன்.

No comments:

Post a Comment