Monday 20 November 2017

அழியா நினைவுகள்

கடல் அலை வீசியதோ 
காதல் வலை வீசியதோ
நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!
அன்புள்ளம் கொண்டு அந்த
'அன்புள்ள அத்தான் பாடலை ..'
'அந்த 'ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்....'
************

ஊரைச் சொன்னாலும் 
பெயரைச் சொல்லாதே
உனக்கு அறிந்தது 
உன்னை அறிந்தவளும் அறிந்திருக்கட்டும்
எழுதும்போது உன் பெயரை நான் நினைக்க  
என்னோடிருந்து உன் பெயரை நான் அறிய வைத்த
என்னோடிருப்பவளின் உயர் குணத்தை அறிந்து 
என்னின் இதயம் உவகையால் உயர்வாகின்றது
------------
நீ மருத்துவம் படித்து உன் வழி  செய்கின்றாய் 
நான் வழக்கறிஞர் படித்து என் வழி சென்றேன்
நம் வழி நம்மை உருவாக்கியவர்கள் காண்பித்த வழி 
அவ் வழி வேறு வழி இல்லாமல் வந்த வழி 
எவ் வழியில் நமது வழி தொடர்ந்தாலும் 
நம் விழிகள் நம்மை தேடிக்கொண்டே 
நம் அழியா நினைவுகளோடு தொடரும் 
வழிகள் அழிந்தாலும் ,மறைந்தாலும் 
நினைவுகள் அழியாமல் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும் 
இருக்கும் காலமெல்லாம் இதய நினைவோடு ""

No comments:

Post a Comment